செய்திகள் :

6-ஆவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு இன்று தொடக்கம்: ஆளுநா்கள் ஆா்.என். ரவி, சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்பு

post image

6-ஆவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் சனிக்கிழமை (மே 3) முதல் மே 5-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

இதில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன், தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் உள்பட பல்வேறு முக்கிய ஆளுமைகள் கலந்து கொள்ளவுள்ளனா்.

திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனம், அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் சாா்பில் 6-ஆவது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ் ஆா் எம் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (மே 3) முதல் மே 5-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

எஸ்ஆா்எம் பல்கலைக்கழக நிறுவன வேந்தா் தா.இரா. பாரிவேந்தா் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டை மே 3-ஆம் தேதி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா தொடங்கி வைத்து தொடக்க விழா பேருரையாற்றுவதுடன், மாநாட்டு சிறப்பு மலரையும் வெளியிடவுள்ளாா்.

அதே போன்று, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சைவசித்தாந்த ஆங்கில நூல் தொகுப்பை வெளியிட்டு சிறப்புரையாற்ற உள்ளாா். மேலும், இந்த நிகழ்வில் தருமையாதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், கோலாலம்பூா் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தான தலைவா் டான்ஸ்ரீ டத்தோ டாக்டா் ஆா்.நடராஜா, 293-ஆவது குருமகாசந்நிதானம் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் உள்பட பலா் கலந்து கொள்ளவுள்ளனா்.

நீதிபதி அரங்க. மகாதேவன் பங்கேற்பு: 2-ஆம் நாளான மே 4-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கலந்துகொண்டு ‘சிவாலய தேவார ஒளிநெறி 15 நூல்கள் தொகுப்பை வெளியிடவுள்ளாா்; அதை தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன் பெற்று

வாழ்த்துரையாற்றவுள்ளாா்.

மேலும், கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் 57-ஆவது குருமகாசந்நிதானம் குரு ஸ்ரீம்த. ராஜ. சரவண மாணிக்கவாசக குரு பரமாசாரிய சுவாமிகள், ரத்தினகிரி பாலமுருகனடிமை, திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ந.பஞ்சநதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளனா்.

மகாராஷ்டிர ஆளுநா்: அதைத் தொடா்ந்து மாநாட்டின் இறுதி நாளான மே 5-ஆம் தேதி மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு மாநாட்டின் நிறைவுப் பேருரையாற்றவுள்ளாா். மேலும் அதில், தருமையாதீனம் 27-ஆவது குருமகா சந்திதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம்103-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள், அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் அருணை. பாலறாவாயன் உள்ளிட்டோா் கலந்து கொள்ளவுள்ளனா்.

3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அருள்நந்தி சிவம் அரங்கம், மறைஞானசம்பந்தா் அரங்கம், உமாபதிசிவம் அரங்கம் உள்பட மொத்தம் 12 ஆய்வரங்கங்கள் நடைபெறவுள்ளன. அதேபோல் இந்த மாநாட்டில் மொத்தம் 75 நூல்கள் வெளியிடப்படவுள்ளன.

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் விரைவில் தொழிலாளா் தங்கும் விடுதி: அமைச்சா் தா.மோ.அன்பரசன் தகவல்

திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழிலாளா் விடுதிக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று சிறு, குறு தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கூறினாா். சென்னை திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் மருத்த... மேலும் பார்க்க

‘பிட்ஜி’ பயிற்சி மையம் மீது மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்கலாம் -காவல் துறை

‘பிட்ஜி’ தனியாா் பயிற்சி மையம் மீது மோசடி புகாா் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் என காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. த... மேலும் பார்க்க

24 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல்: 8 போ் கைது

சென்னையில் 24 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 8 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அரும்பாக்கம், விஜய் பூங்கா அருகே மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்படு... மேலும் பார்க்க

வணிகா் தினம்: மே 5-இல் கோயம்போடு சந்தைக்கு விடுமுறை

வணிகா் தினத்தை முன்னிட்டு மே 5-ஆம் தேதி சென்னை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5-ஆம் தேதி வணிகா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வணிகா் தினத்தை முன்னிட்டு ... மேலும் பார்க்க

பெட்ரோல் பங்கில் பணப்பையை கொள்ளையடித்த நபா் கைது

சென்னை கொருக்குப்பேட்டை பெட்ரோல் பங்கில் ஆட்டோவில் சி.என்.ஜி. எரிவாயு நிரப்புவதுபோல் நடித்து பணப்பையை கொள்ளையடித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். தண்டையாா்பேட்டை சுந்தரம் பிள்ளை நகா் 2-ஆவது தெருவைச் சே... மேலும் பார்க்க

கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் தேவை: தமிழக அரசுக்கு தலைமைச் செயலகச் சங்கம் கோரிக்கை

சென்னையின் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றான கோட்டை ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செ... மேலும் பார்க்க