செய்திகள் :

Goa: அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா; கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

post image

கோவாவில் உள்ள சிர்காவ் என்ற இடத்தில் ஸ்ரீ லைராய் தேவி கோயில் வருடாந்திர திருவிழா நேற்று இரவு நடந்தது. இத்திருவிழாவிற்காக கோவா முழுவதும் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர்.

விழாவில் முக்கிய நிகழ்வாக தீ மிதி திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சிலர் தீயில் அமர்ந்து பிரார்த்தனை செய்வதுண்டு. இரவு முழுவதும் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன.

மருத்துவமனையில் பிரமோத் சாவந்த்

அத்திருவிழாவை காண பக்தர்கள் திரளாக கூடி இருந்தனர். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.

இதையடுத்து பாதுகாப்புப்பணியில் ஆயிரம் போலீஸார் நிறுத்தப்பட்டு இருந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை இருந்தது.

பக்தர்கள் தீமிதி திருவிழா நடக்கும் இடத்தில் கூடி இருந்தனர். அங்கு அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியதால் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

பக்தர்கள் முண்டியத்துக்கொண்டு ஓடினர். பக்தர்களால் தப்பிச்செல்ல முடியாமல் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சடலம்

டாக்டர்கள் பிற மருத்துவமனையில் இருந்து வரவழைக்கப்பட்டு அனைவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் நிறுத்தப்பட்டு இருந்தபோதிலும் கூட்டத்தை சரியாக நிர்வகிக்க முடியவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் பிரமோத் சாவந்த் நேரிசல் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கூட்ட நெரிசலில் பக்தர்கள் உயிரிழந்திருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திடீரென ஏற்பட்ட மின்தாக்குதல் இந்த கூட்ட நெரிசலுக்கு காரணமாக இருக்கலாம் என்று முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.

Kerala: கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தீ விபத்து; 5 பேர் மரணம்.. நிர்வாகம் சொல்வது என்ன?

கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் உள்ள யு.பி.எஸ் அறையில் இருந்து முதலில் புகைவந்தது, அதைத்தொடர்ந... மேலும் பார்க்க

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்தில் சிக்கிய கரூர் குடும்பம்; குழந்தைகள் உட்பட மூவர் பலி; நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த சோற்றுக்கற்றாழை வியாபாரி பிரபு (வயது: 40). இவரது மனைவி மதுமிதா (வயது: 35).இந்த தம்பதிக்கு தியா (வயது: 10), ரிதன் (வயது: 3) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். அ... மேலும் பார்க்க

மும்பை: ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து; 198 கடைகள் சேதம்; உயிர்தப்பிய மக்கள்!

மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் குரோமா ஷோரூம் உள்ளிட்ட கடைகள் இருக்கும் பாந்த்ரா பஜார் எனும் மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்சில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேர... மேலும் பார்க்க

கொல்கத்தா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 14 பேர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

கொல்கத்தாவின் மத்திய பகுதியில் உள்ள ருதுராஜ் ஹோட்டலில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்துக்கொண்டது. இத் தீ மளமளவென அனைத்து பகுதிக்கும் பரவியது. தீயில் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர். மக்கள் நெருக்கம் மிகுந... மேலும் பார்க்க

கேரளா: 5 வயது சிறுமியைக் கடித்த தெரு நாய்; தடுப்பூசி போடப்பட்டும் மரணமடைந்த சோகம்; என்ன நடந்தது?

கேரள மாநிலம் மலப்புரம் பெருவள்ளூரைச் சேர்ந்தவர் சல்மான் பாரிஸ். இவரது மகள் ஸியா பாரிஸ். 5 வயது ஆன ஸியா பாரிஸ் கடந்த மாதம் 29-ம் தேதி வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு மிட்டாய் வாங்க நடந்து சென்றுள்ளார்.அப... மேலும் பார்க்க

நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 மகன்களை, தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய தந்தை.. திருப்பூரில் சோகம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் உள்ள பிஏபி வாய்க்காலில் குளிப்பதற்காக, கோவையில் இருந்து சேகர் தனது குடும்பத்துடன் வந்துள்ளார்.அப்போது, வாய்க்காலில் தனது இரண்டு மகன்களான சசிதரன் ... மேலும் பார்க்க