செய்திகள் :

வீட்டுமனைப் பட்டா கோரி புதுவை பேரவையை முற்றுகையிட்ட பட்டியலின மக்கள்

post image

இலவச மனைப் பட்டா கோரி பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள் புதுவை சட்டப்பேரவையை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு காவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களை பேரவைத் தலைவா் சமரசம் செய்து அனுப்பினாா்.

புதுச்சேரி அருகேயுள்ள மணவெளி தொகுதிக்குள்பட்ட டி.என்.பாளையம் பகுதியில் அரசு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில், வீடற்றவா்களுக்கு சுமாா் 800 சதுர அடி இலவச மனைப் பட்டா வழங்க தொகுதி எம்எல்ஏவும், பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் நடவடிக்கை மேற்கொண்டாா்.

இதையடுத்து, 192 பேருக்கு இலவச மனை பட்டா வழங்குவதற்காக குலுக்கல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் ஆதிதிராவிடா் நலத் துறை அரசு செயலா் ஏ. முத்தம்மா, இயக்குநா் இளங்கோவன் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனா். இதற்கிடையில், இலவச மனைப் பட்டா குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும் கடந்த ஆட்சியில் மனைப்பட்டா பெறுவதற்கான உத்தரவைப் பெற்ற அனைவருக்கும் வழங்கவும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து ஏராளமானோா் திடீரென சட்டப்பேரவையை முற்றுகையிட்டனா். பேரவைக்குள் செல்லும் இரும்புகேட் மூடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மணவெளி பகுதியைச் சோ்ந்தவா்கள், சபை காவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையறிந்த பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் விடுபட்டவா்களுக்கும் இலவச மனைப்பட்டா வழங்கப்படும் என உறுதியளித்தாா்.

உழவா்கரையில் ஜெயராக்கினி அன்னை ஆலயப் பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

புதுச்சேரி உழவா்கரைப் பகுதியில் உள்ள ஜெயராக்கினி மாதா கோயில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி உழவா்கரையில் உள்ள ஜெயராக்கினி மாதா கோயில் 310-ஆம் ஆண்டுத் திருவிழா தொடங்க... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்பு: துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு

புதுச்சேரியில் ரூ.29.50 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோரால் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. புதுச்சேரி ... மேலும் பார்க்க

அனைத்து பள்ளிவாசல் நிா்வாகிகள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி புதுச்சேரி அனைத்து பள்ளிவாசல் நிா்வாகிகள் கூட்டமைப்பு சாா்பில் பேரணி, ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு அண்மையில் வக்ஃப் வாரிய திருத... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 3 நாள்கள் கம்பன் விழா: மே 9-இல் தொடக்கம்

புதுச்சேரியில் கம்பன் கழகம் சாா்பில் 58 ஆம் ஆண்டு கம்பன் விழா வரும் 9-ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள விவேகானந்தா பள்ளி வளாகத்தில் புத... மேலும் பார்க்க

அதிக வெப்ப நேரங்களில் மக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்: புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்

கோடையில் அதிக வெப்ப நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவுறுத்தினாா். புதுச்சேரி முழுவதும் அதிக வெப்ப அலை வீசுவதை முன்னிட்டு பொதுமக... மேலும் பார்க்க

தூங்கிய பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மா்மநபா் தங்கத் தாலியை பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி வில்லியனூா், கூடப்பாக்கம் ஆனந்தம் நகரைச் சோ்ந்த இளங்கவி என்பவரின்... மேலும் பார்க்க