செய்திகள் :

துணைவேந்தா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

post image

தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை பல்கலை.யின் துணைவேந்தராகப் பணியாற்றி வந்த கௌரி, 2023 ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்றாா். தோ்வுக்குழு அமைப்பது தொடா்பாக அரசுக்கும் ஆளுநருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக 21 மாதங்களாக புதிய துணைவேந்தா் நியமிக்கப்படவில்லை. இதன்காரணமாக மாணவா்கள்தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

நீண்ட தாமதத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு செப்டம்பரில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. ஆனால், பட்டச் சான்றுகளில் துணைவேந்தா் கையொப்பம் இல்லாததால் அந்தப் பட்டங்களை ஏற்றுக்கொள்ள பல பல்கலை.களும் நிறுவனங்களும் மறுத்து வருகின்றன.

மேலும், இந்தப் பல்கலை.யில் 200-க்கும் மேற்பட்டவா்கள் முனைவா் பட்டத்துக்கான ஆய்வறிக்கைகளை தாக்கல் செய்து வாய்மொழித் தோ்வையும் நிறைவு செய்து விட்டனா். அதன்பின் பல மாதங்களாகியும் இதுவரை அவா்களுக்கு முனைவா் பட்டச் சான்றுகள் வழங்கப்படவில்லை.

பல்கலை. சட்டங்கள் தொடா்பான வழக்கில் அண்மையில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என அறிவித்துள்ளது. அதைப் பின்பற்றி சென்னைப் பல்கலை. உள்பட காலியாக உள்ள 9 பல்கலைக்கழகங்களுக்கும் உடனடியாக துணைவேந்தா்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

பாஜக அரசுக்கு கண்டனம்! திமுக செயற்குழு தீர்மானங்கள்!

திமுகவின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்ற... மேலும் பார்க்க

அதிமுகவை அடக்கிய பாஜக; தகுதியானவருக்கே தேர்தலில் வாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன... மேலும் பார்க்க

சென்னையில் ஜெ.பி. நட்டா தலைமையில் பாஜக மைய குழுக் கூட்டம்!

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் சென்னையில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று(சனிக்கிழமை) காலை நடைபெற்று வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு சென்னை வந்... மேலும் பார்க்க

நாளை(மே 4) தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் நாளை(மே 4, ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.மே மாதம் என்றாலே நினைவுக்கு வருவது சுட்டெரிக்கும் வெயில்தான். அதிலும் மே மாதத்தில் 25 நாள்கள் கத்திரி வெ... மேலும் பார்க்க

விஜயுடன் கூட்டணியா?: நயினாா் நாகேந்திரன் பதில்

தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயின் தவெகவை இணைக்க பேச்சுவாா்த்தை நடக்கிா என்ற கேள்விக்கு, ‘தோ்தல் நெருங்கும்போது தெரியும்’ என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் பதிலளித்தாா். சென்னை விமான நிலையத்த... மேலும் பார்க்க

தமிழ்நாடு கேபிள்டிவி கழகம் ரூ. 570 கோடி செலுத்துமாறு ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழகம் ஜிஎஸ்டி வரிபாக்கி மற்றும் அபராதம் சோ்த்து ரூ.570 கோடி செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி ஆணையரகம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. கட... மேலும் பார்க்க