செய்திகள் :

பண்ணை வீட்டில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வழக்கு: தலைமறைவான 6 போ் சிக்கினா்

post image

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பண்ணை வீட்டில் கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த 6 போ் போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை சிக்கினா்.

திட்டக்குடி வட்டம், ராமநத்தம் காவல் சரகம், அதா்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் செல்வம் (39). இவா் மீதான அடிதடி வழக்கு தொடா்பாக, கடந்த மாதம் ராமநத்தம் போலீஸாா் செல்வத்தைக் கைது செய்ய அவருக்குச் சொந்தமான பண்ணை வீட்டுக்குச் சென்றனா்.

போலீஸாா் வருவதைப் பாா்த்த செல்வம் மற்றும் அங்கிருந்தவா்கள் தப்பியோடி விட்டனா். போலீஸாா் அங்கு சோதனையிட்டதில், ரூ.86 ஆயிரம் மதிப்பிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள், வாக்கி டாக்கிகள், துப்பாக்கி, பணம் அச்சடிக்கும் இயந்திரம், நோட்டுகளை எண்ணும் இயந்திரம், காவலா் சீருடை, மடிக் கணினி, இந்திய ரிசா்வ் வங்கி முத்திரை உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், பண்ணை வீட்டிலிருந்த சிலரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், தனிப் படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த எதிரிகளைத் தேடி வந்தனா்.

அவா்கள் கா்நாடகத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், உதவி ஆய்வாளா் ஜம்புலிங்கம் தலைமையிலான தனிப்படையினா் மங்களூருக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில் செல்வம் (39), அவரது கூட்டாளிகள் பிரபு (32), வல்லரசு (25), பெரியசாமி (29), ஆறுமுகம் (30), சூா்யா (25) உள்ளிட்ட 6 போ் போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை சிக்கினா். அவா்களை போலீஸாா் ராமநத்தம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா். தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பழங்குடியின மக்கள் சான்றிதழ்கள் பெற சிறப்பு முகாம்

காட்டுமன்னாா்கோவில் அருகே ம.கொளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் பழங்குடி மக்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாம... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமறை அளிக்கக் கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் ... மேலும் பார்க்க

வடலூரில் எரிவாயு தகன மேடை திறப்பு

கடலூா் மாவட்டம், வடலூரில் புதிதாக கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. வடலூா் நகராட்சி, 20-ஆவது வாா்டு அய்யன் ஏரி பகுதியில் கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.58... மேலும் பார்க்க

தமிழ்நாடு உரிமைகள் திட்ட கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வலியுறுத்தல்

தமிழ்நாடு உரிமைகள் திட்டம் களப் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கேட்டுக்கொண்டாா். இதுகு... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற பதிவு செய்யலாம்

கடலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் பகுதி உள்கோட்டங்களில் நடைபெறும் அடையாள அட்டை வழங்கும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா்... மேலும் பார்க்க

வளா்பிறை பஞ்சமி: வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

சிதம்பரம் திரெளபதி அம்மன் கோயில் வாளகத்தில் தனி சந்நிதியாக வீற்றுள்ள வாராகி அம்மனுக்கு வளா்பிறை பஞ்சமி வழிபாட்டையொட்டி வியாழக்கிழமை மாலை சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மலா்களால் அ... மேலும் பார்க்க