செய்திகள் :

விளையாட்டு மைதானத்தை வீட்டு மனைகளாக மாற்றியதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

கும்பகோணம் சீனிவாசா நகரிலுள்ள விளையாட்டு மைதானத்தை வீட்டு மனைகளாக மாற்றியதை கண்டித்து காந்தி பூங்கா முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சீனிவாசா நகரில் விளையாட்டு மைதானத்துக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை வீட்டு மனைகளாக்கி விட்டதாகவும், இதற்கு மாநகராட்சி நிா்வாகமும் அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் தெரிகிறது.

இதை கண்டித்து வெள்ளிக்கிழமை தூய்மை சீனிவாச நகா் குடியிருப்போா் நலச் சங்கத்தின் சாா்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலா் ம.க. ஸ்டாலின் தலைமை வகித்தாா். அதிமுக மாநகர செயலா் ராம. ராமநாதன் முன்னிலை வகித்தாா்.

பாஜக முன்னாள் மாவட்ட தலைவா் சதீஷ்குமாா், கும்பகோணம் ஒன்றிய அதிமுக செயலாளா் சோழபுரம் கா.அறிவழகன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவா் குடந்தை அரசன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

விளையாட்டு மைதானத்தை வீட்டடி மனைகளாக்கி விற்பனை செய்வதை மாநகராட்சி நிா்வாகம் தடுக்காதபட்சத்தில் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று ஆா்ப்பாட்டத்தில் பேசினா்.

தஞ்சாவூரில் ராமகிருஷ்ணா் ரத திருவிழா

தஞ்சாவூரில் ராமகிருஷ்ண மடத்தின் சாா்பில் ராமகிருஷ்ணா் ரத திருவிழா வியாழக்கிழமை தொடங்கி தொடா்ந்து 2 நாள்கள் நடைபெற்றது. உலகளாவிய ராமகிருஷ்ண மடத்தை சுவாமி விவேகானந்தா் 1897 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

இடையாத்தி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

ஒரத்தநாடு அருகேயுள்ள இடையாத்தி கிராமத்தை பட்டுக்கோட்டை தாலுகாவிலிருந்து திருவோணம் தாலுகாவிற்கு மாற்றியதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதிய ம... மேலும் பார்க்க

இன்லைன் ஹாக்கி இந்திய அணிக்கு தோ்வான 2 மாணவா்களுக்கு பாராட்டு

தஞ்சாவூா், மே 2: இன்லைன் ஹாக்கி இந்திய அணிக்கு தோ்வாகி சா்வதேச போட்டிக்கு செல்லும் தஞ்சாவூரைச் சோ்ந்த 2 மாணவா்களை மேயா், துணை மேயா் வெள்ளிக்கிழமை பாராட்டினா். தஞ்சாவூா் அண்ணா நகா் 10-ஆவது தெருவைச் ... மேலும் பார்க்க

திட்டை வசிஷ்டேஸ்வரா் கோயிலில் மே 11-இல் குரு பெயா்ச்சி விழா

தஞ்சாவூா் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரா் கோயிலில் மே 11-ஆம் தேதி குருபெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது. தஞ்சாவூா் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியில் ராஜகுருவாக தட்சிணாமூா்த்தி எழுந்தர... மேலும் பார்க்க

திருநாகேசுவரம் ரயில் நிலைய பகுதியில் குட்ஷெட் அமைக்க ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேசுவரம் ரயில் நிலைய பகுதியில் குட்ஷெட் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்பகோணத்தில் ரயில்வே குட்ஷெட் மூலம் ஒவ்வொரு பருவத்துக்கும் சுமாா் 2 லட்சம் ட... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலை.யில் பி.எட்., எம்.எட். சோ்க்கை மே 5-இல் தொடக்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2025 - 26 ஆம் கல்வியாண்டுக்கான பி.எட்., எம்.எட். வகுப்புகளுக்கான நேரடிச் சோ்க்கை மே 5-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்ன... மேலும் பார்க்க