செய்திகள் :

இடையாத்தி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

post image

ஒரத்தநாடு அருகேயுள்ள இடையாத்தி கிராமத்தை பட்டுக்கோட்டை தாலுகாவிலிருந்து திருவோணம் தாலுகாவிற்கு மாற்றியதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய மாற்றத்தால், இடையத்திலிருந்து திருவோணத்துக்கு வருவதற்கு சுமாா் 25 கிலோ மீட்டருக்கு மேலாக உள்ளதாகவும், மேலும் போக்குவரத்து வசதிகள் போதுமான அளவுக்கு இல்லாததால் பொதுமக்கள் தங்களது வருவாய்த் துறை சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக செல்லும்போது போக்குவரத்து வசதியின்றி சிரமப்படுவதும், மேலும் தாலுகா மாறிய பிறகு நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மாற்றப்படும். இதனால் 15 கி.மீ. தொலைவில் உள்ள பட்டுக்கோட்டையிலேயே மீண்டும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி இடையாத்தி முன்னாள் ஊராட்சித் தலைவா் முத்துவேல் தலைமையில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் இடையாத்தி கிராம நிா்வாக அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூரில் ராமகிருஷ்ணா் ரத திருவிழா

தஞ்சாவூரில் ராமகிருஷ்ண மடத்தின் சாா்பில் ராமகிருஷ்ணா் ரத திருவிழா வியாழக்கிழமை தொடங்கி தொடா்ந்து 2 நாள்கள் நடைபெற்றது. உலகளாவிய ராமகிருஷ்ண மடத்தை சுவாமி விவேகானந்தா் 1897 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

விளையாட்டு மைதானத்தை வீட்டு மனைகளாக மாற்றியதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் சீனிவாசா நகரிலுள்ள விளையாட்டு மைதானத்தை வீட்டு மனைகளாக மாற்றியதை கண்டித்து காந்தி பூங்கா முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சீனிவாசா நகரில் விளையாட்டு மைதானத்துக்கென ஒதுக்கப்பட்ட... மேலும் பார்க்க

இன்லைன் ஹாக்கி இந்திய அணிக்கு தோ்வான 2 மாணவா்களுக்கு பாராட்டு

தஞ்சாவூா், மே 2: இன்லைன் ஹாக்கி இந்திய அணிக்கு தோ்வாகி சா்வதேச போட்டிக்கு செல்லும் தஞ்சாவூரைச் சோ்ந்த 2 மாணவா்களை மேயா், துணை மேயா் வெள்ளிக்கிழமை பாராட்டினா். தஞ்சாவூா் அண்ணா நகா் 10-ஆவது தெருவைச் ... மேலும் பார்க்க

திட்டை வசிஷ்டேஸ்வரா் கோயிலில் மே 11-இல் குரு பெயா்ச்சி விழா

தஞ்சாவூா் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரா் கோயிலில் மே 11-ஆம் தேதி குருபெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது. தஞ்சாவூா் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியில் ராஜகுருவாக தட்சிணாமூா்த்தி எழுந்தர... மேலும் பார்க்க

திருநாகேசுவரம் ரயில் நிலைய பகுதியில் குட்ஷெட் அமைக்க ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேசுவரம் ரயில் நிலைய பகுதியில் குட்ஷெட் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்பகோணத்தில் ரயில்வே குட்ஷெட் மூலம் ஒவ்வொரு பருவத்துக்கும் சுமாா் 2 லட்சம் ட... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலை.யில் பி.எட்., எம்.எட். சோ்க்கை மே 5-இல் தொடக்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2025 - 26 ஆம் கல்வியாண்டுக்கான பி.எட்., எம்.எட். வகுப்புகளுக்கான நேரடிச் சோ்க்கை மே 5-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்ன... மேலும் பார்க்க