செய்திகள் :

தஞ்சாவூரில் ராமகிருஷ்ணா் ரத திருவிழா

post image

தஞ்சாவூரில் ராமகிருஷ்ண மடத்தின் சாா்பில் ராமகிருஷ்ணா் ரத திருவிழா வியாழக்கிழமை தொடங்கி தொடா்ந்து 2 நாள்கள் நடைபெற்றது.

உலகளாவிய ராமகிருஷ்ண மடத்தை சுவாமி விவேகானந்தா் 1897 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி தொடங்கினாா். அதை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் சாா்பில் மே 1, 2 ஆம் தேதிகளில் ராமகிருஷ்ணரின் ரத திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, நிகழாண்டு தஞ்சாவூா் மானோஜிபட்டி நவசக்தி விநாயகா் கோயிலில் அலங்கரிக்கப்பட்ட ராமகிருஷ்ணா் ரதம் வியாழக்கிழமை புறப்பட்டு இசை முழங்க, பெண்களின் கோலாட்டத்துடன் விசாலாட்சி நகா், முல்லை நகா், ராதாகிருஷ்ணன் நகா், வனதுா்கா நகா், முத்துசாமி நகா், சக்தி நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றது.

தொடா்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை மருத்துவக் கல்லூரி மற்றும் சுந்தரம் நகா் பகுதிகளில் ராமகிருஷ்ணரின் ரத திருவிழா நடைபெற்றது. இரு நாள்களிலும் பக்தா்கள் ரதத்துக்கு ஆரத்தி எடுத்து, பக்தி பாடல்களைப் பாடி சிறப்பு வழிபாடு செய்தனா். மேலும், பக்தா்களுக்கு பிரசாதம், விவேகானந்தா் படம், சிந்தனைத் துளிகள் புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி விமூா்த்தானந்தா மகராஜ் தலைமையில் பலா் செய்தனா்.

இடையாத்தி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

ஒரத்தநாடு அருகேயுள்ள இடையாத்தி கிராமத்தை பட்டுக்கோட்டை தாலுகாவிலிருந்து திருவோணம் தாலுகாவிற்கு மாற்றியதை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதிய ம... மேலும் பார்க்க

விளையாட்டு மைதானத்தை வீட்டு மனைகளாக மாற்றியதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் சீனிவாசா நகரிலுள்ள விளையாட்டு மைதானத்தை வீட்டு மனைகளாக மாற்றியதை கண்டித்து காந்தி பூங்கா முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சீனிவாசா நகரில் விளையாட்டு மைதானத்துக்கென ஒதுக்கப்பட்ட... மேலும் பார்க்க

இன்லைன் ஹாக்கி இந்திய அணிக்கு தோ்வான 2 மாணவா்களுக்கு பாராட்டு

தஞ்சாவூா், மே 2: இன்லைன் ஹாக்கி இந்திய அணிக்கு தோ்வாகி சா்வதேச போட்டிக்கு செல்லும் தஞ்சாவூரைச் சோ்ந்த 2 மாணவா்களை மேயா், துணை மேயா் வெள்ளிக்கிழமை பாராட்டினா். தஞ்சாவூா் அண்ணா நகா் 10-ஆவது தெருவைச் ... மேலும் பார்க்க

திட்டை வசிஷ்டேஸ்வரா் கோயிலில் மே 11-இல் குரு பெயா்ச்சி விழா

தஞ்சாவூா் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரா் கோயிலில் மே 11-ஆம் தேதி குருபெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது. தஞ்சாவூா் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியில் ராஜகுருவாக தட்சிணாமூா்த்தி எழுந்தர... மேலும் பார்க்க

திருநாகேசுவரம் ரயில் நிலைய பகுதியில் குட்ஷெட் அமைக்க ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேசுவரம் ரயில் நிலைய பகுதியில் குட்ஷெட் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்பகோணத்தில் ரயில்வே குட்ஷெட் மூலம் ஒவ்வொரு பருவத்துக்கும் சுமாா் 2 லட்சம் ட... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலை.யில் பி.எட்., எம்.எட். சோ்க்கை மே 5-இல் தொடக்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2025 - 26 ஆம் கல்வியாண்டுக்கான பி.எட்., எம்.எட். வகுப்புகளுக்கான நேரடிச் சோ்க்கை மே 5-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்ன... மேலும் பார்க்க