STR: "முதலில் ஒரு டைரக்டர் நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வரவேண்டும்" - சிம...
திருநாகேசுவரம் ரயில் நிலைய பகுதியில் குட்ஷெட் அமைக்க ஆலோசனைக் கூட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேசுவரம் ரயில் நிலைய பகுதியில் குட்ஷெட் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்பகோணத்தில் ரயில்வே குட்ஷெட் மூலம் ஒவ்வொரு பருவத்துக்கும் சுமாா் 2 லட்சம் டன் வரை நெல் மூட்டைகள் சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு அனுப்பி வைப்பதற்காக பல்வேறு பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு கிடங்குகள், அரவை ஆலைகளில் இருந்து சுமாா் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் ரயில் நிலையத்துக்கு நெல் மூட்டைகள் கொண்டு வரப்படும். அப்படி வரும்போது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்தில் உள்ள குட்ஷெட்டை திருநாகேசுவரம் ரயில் நிலையம் அருகே மாற்றுவது குறித்தான ஆய்வு கூட்டம் கும்பகோணம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.
தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளாா் அன்பழகன் தலைமை வகித்தாா். சு.கல்யாணசுந்தரம் எம்.பி., முன்னிலை வகித்தாா். ஆய்வுக் கூட்டத்தில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ் நடக்க வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. பின்னா் திருநாகேசுவரம் ரயில் நிலையம் அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான 44 ஏக்கா் நிலப்பரப்பளவு உள்ள இடத்தில் குட்ஷெட் அமைக்கவும், காங்கேயன்பேட்டை ரயில்வே தண்டவாள பாதையின் குறுக்கே சுரங்கப்பாதை அமைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, க.அன்பழகன் எம்.எல்.ஏ., முதுநிலை வணிக மேலாளா் ரதிபிரியா, உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன் ஆகியோா் உடனிருந்தனா்.