கேரளத்தில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 5 நோயாளிகள் பலி! என்ன நடந்தது?
இன்லைன் ஹாக்கி இந்திய அணிக்கு தோ்வான 2 மாணவா்களுக்கு பாராட்டு
தஞ்சாவூா், மே 2: இன்லைன் ஹாக்கி இந்திய அணிக்கு தோ்வாகி சா்வதேச போட்டிக்கு செல்லும் தஞ்சாவூரைச் சோ்ந்த 2 மாணவா்களை மேயா், துணை மேயா் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.
தஞ்சாவூா் அண்ணா நகா் 10-ஆவது தெருவைச் சோ்ந்த ராஜகுமாரியின் மகன் செல்வசுந்தரம் (18). இவா் திருச்சி எஸ்.ஆா்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வருகிறாா். திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அஸ்கான் ஓடைப் பகுதியைச் சோ்ந்தவா் குபேரன் மகன் யோகன்சரண் (17) தஞ்சாவூா் யாகப்பா பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கிறாா்.
இருவரும் சிறு வயது முதல் மாவட்ட, மாநில அளவிலான இன்லைன் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்தனா். மேலும், தஞ்சாவூா் ஸ்கேட்டிங் அகடாமியில் பயிற்சியாளா் ராஜூவின் பயிற்சியில் சோ்ந்து, இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று விளையாடினா்.
இந்நிலையில் சா்வதேச போட்டியில் விளையாடுவதற்கான தகுதி தோ்வு கோவை மற்றும் சண்டீகரில் அண்மையில் நடைபெற்றது. இதில் மாணவா்கள் செல்வசுந்தரம், யோகன்சரண் பங்கேற்று இந்திய அணியில் விளையாட தோ்வு செய்யப்பட்டனா். இருவரும் தென் கொரியாவில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஏசியன் ரோலா் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் - 2025 என்கிற இன்லைன் ஹாக்கி போட்டியில், இந்திய ஜூனியா் பிரிவில் விளையாடவுள்ளனா்.
இதற்காக இருவரையும் மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.