செய்திகள் :

"என் கணவர், குழந்தைகளுடன் வாழ உதவுங்கள்" - புதுச்சேரி முதல்வரிடம் உதவி கேட்கும் பாகிஸ்தான் பெண்

post image

ப்பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் மக்கள் அனைவரையும் வெளியேற உத்தரவிட்டிருக்கும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கும் அதற்கான ஆணையை அனுப்பி வைத்திருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக மருத்துவ உதவிகளுக்காக இந்தியா வந்தவர்களும், திருமணம் செய்துகொண்டு இந்தியாவுக்கு வந்தவர்களும் மத்திய அரசிடம் உதவி கேட்டு வருகின்றனர்.

அதன்படி இந்தியாவுக்குத் திருமணம் செய்து கொண்டு வந்த பாகிஸ்தான் பெண் ஒருவர், புதுச்சேரி முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹனீப்கான் என்பவருக்கும், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பௌசியா பேகம் என்ற பெண்ணுக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

அதையடுத்து புதுச்சேரியில் உள்ள வீட்டில் இருவரும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் இருக்கின்றன.

இந்த நிலையில் பௌசியாபேகம் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று தூதரக அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் வழங்கினர்.

ஆனால் தன்னுடைய கணவரையும், குழந்தைகளையும் பிரிந்து செல்ல மாட்டேன் என்று மறுத்துவிட்டார் பௌசியா பேகம்.

அதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாகப் பேசிய ஹனீப்கான், ``கடந்த 2023-ம் ஆண்டு என் மனைவி பௌசியா பேகத்திற்கு எல்.டி.வி விசா (Long Term Visa) கேட்டு, வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்தில் இதுவரை 8 முறை ஆன்லைனில் விண்ணப்பித்திருக்கிறோம்.

தற்போது விசா பரிசீலனைக்காக இன்று வருமாறு கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் என் மனைவியைத் திடீரென இந்தியாவில் இருந்து வெளியேறச் சொல்கிறார்கள்.

மனைவி பௌசியா பேகத்துடன் ஹனீப்கான்

பௌசியா பேகம் என்னுடைய தாய் மாமன் மகள்தான். என் மாமாவுக்கும், மாமியாருக்கும் சென்னைதான் பூர்வீகம். வேலைக்காகப் பாகிஸ்தான் சென்ற அவர்கள் அங்கேயே தங்கிவிட்டார்கள்.

கடந்த 2012-ல்தான் பௌசியா பேகத்தைத் திருமணம் செய்து கொண்டேன். இப்போது எங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களை விட்டுவிட்டு என் மனைவி மட்டும் எப்படிப் பாகிஸ்தான் செல்ல முடியும் ?

அதனால் என் மனைவிக்கு இந்தியக் குடியுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

அதேபோல, `இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு என் கணவர், குழந்தைகளைப் பிரிந்து நான் எப்படிச் செல்வது? அதனால் அவர்களுடன் வாழ்வதற்குப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அய்யாதான் எங்களுக்கு உதவ வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

'பஸ்ஸைப் பாதியில் நிறுத்தி டிரைவர் தொழுகை' - வைரல் வீடியோ; அமைச்சரின் அதிரடி நடவடிக்கை

கர்நாடகாவில் ஹூப்பள்ளி - ஹவேரி சாலையில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் சாலையோரமாகப் பேருந்தை நிறுத்திவிட்டு தொழுகை செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டிரைவர் சீட்டிற்குப் பின் இருக... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு: "அதிகாரம் இருந்தும் திமுக செய்யவில்லை; ஆனால், மத்திய அரசு செய்கிறது" - ஓபிஎஸ்

நேற்று சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்ததை வரவேற்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அ... மேலும் பார்க்க

கடும் வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் என்ன?

அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. அதாவது மே 4-ம் தேதி தொடங்கி, மே 28-ம் தேதி வரை உள்ளது. அதற்குள்ளேயே, வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், 'பள்ளிகள் திறப்பு தள்ளிப்போடப்படு... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு: ``2011-ல் நடந்தது போல மீண்டும் நடக்கக் கூடாது" - மநீம தலைவர் கமல்ஹாசன்

நீண்ட கால எதிர்க்கட்சிகளின் அழுத்தத்துக்குப் பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என கேபினட் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் இந... மேலும் பார்க்க

உக்ரைனுடன் ஒப்பந்தம் போட்ட அமெரிக்கா: 'நான் இல்லையென்றால், புதின்...' ரஷ்யாவை சாடும் ட்ரம்ப்

நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேர்காணல் ஒன்றில் ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து பேசியுள்ளார். "புதினுக்கு முழு உக்ரைனுமே வேண்டும் என்று நினைக்கிறேன். நான் மட்டும் தேர்தலில் வெற்றி பெறவில்லை எ... மேலும் பார்க்க