செய்திகள் :

பயங்கரவாதத்தை மோடி அரசு காப்பாற்றாது: அமித் ஷா

post image

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

அஸ்ஸாமில் போடோ சமூகத்தின் தலைவரான உபேந்திர நாத் பிரம்மாவின் சிலை திறப்பு விழா மற்றும் அவரது பெயரை ஒரு சாலைக்கு சூட்டுவதற்கும் தில்லியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தில்லி முதல்வர் ரேகா குப்தா ஆகியோரும் பங்கேற்றனர்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு, முதன்முறையாக மத்திய அமைச்சர் அமித் ஷா இந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, பஹல்காமில் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை யார் நடத்தியிருந்தாலும், அவர்களை விடமாட்டோம். தாக்குதலுக்கு காரணமானவர்கள் ஒவ்வொருவரையும் கண்டுபிடிப்போம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பயங்கரவாதிகள் யாரையும் காப்பாற்றாது.

பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படும்வரையில், அரசின் போராட்டம் தொடரும். 26 பேரை பலியாக்கியதால், நீங்கள் வென்று விட்டீர்கள் என்று நினைக்க வேண்டாம். உங்கள் ஒவ்வொருவருக்கும் தகுந்த பதில் தரப்படும்.

நாட்டின் எந்த மூலையிலும் பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம். அதன் வேரிலிருந்து அடியோடு அகற்றுவோம். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கின்றன என்று தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் கிரிஜா வியாஸ் காலமானார்!

முன்னாள் மத்திய அமைச்சர் கிரிஜா வியாஸ் காலமானார்.மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கிரிஜா வியாஸ் (79), குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானதை அவரது குடும்பத்தின... மேலும் பார்க்க

பயங்கரவாதம் எங்கிருந்தாலும் வேரோடு பிடுங்கி எறியப்படும்! - அமித் ஷா

நாட்டில் பயங்கரவாதம் எங்கிருந்தாலும் வேரோடு பிடுங்கி எறியப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

இந்திய ரயில்வே டிஜிட்டல் கடிகார வடிவமைப்பு போட்டி! ரூ.5 லட்சம் பரிசு!

சிறந்த டிஜிட்டல் கடிகார வடிவமைப்புக்கான போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே அறிவித்து டிஜிட்டல் கடிகார வடிவமைப்பு ரயில் நி... மேலும் பார்க்க

அதிகரிக்கும் போர்ப் பதற்றம்! அமெரிக்க பாதுகாப்பு செயலருடன் ராஜ்நாத் சிங் பேச்சு!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மிகவும் பரபரப்பான போர்ப் பதற்றத்துக்கு மத்தியில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்துடன் பேச்சுவார்த்தை நட... மேலும் பார்க்க

தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான பாஜக அரசு! கார்கே குற்றச்சாட்டு!

தொழிலாளர்களுக்கு எதிராகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதராகவும் பாஜக அரசு செயல்படுவதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.மே தினத்தையொட்டி, பெங்களூரில் தொழிலாளர் தின நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்... மேலும் பார்க்க

20,000 பேருக்கு வேலைவாய்ப்பு: காக்னிசன்ட் அறிவிப்பு!

அமெரிக்காவின் நியூ ஜெர்சியை தலைமையிடமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட், இந்தியாவில் புதிதாக 20,000 பணியிடங்களைச் சேர்க்கவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்த... மேலும் பார்க்க