செய்திகள் :

சாதிவாரி கணக்கெடுப்பு: "அதிகாரம் இருந்தும் திமுக செய்யவில்லை; ஆனால், மத்திய அரசு செய்கிறது" - ஓபிஎஸ்

post image

நேற்று சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்ததை வரவேற்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்க வேண்டுமென்றால்,

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியது அவசியம் என்ற நிலை இருந்தபோதிலும், இதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருந்த நிலையிலும்,

இதன் அடிப்படையில் கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையிலும், இதனை நிறைவேற்ற தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

 மோடி - ஓ.பி.எஸ்
மோடி - ஓ.பி.எஸ்

மாறாக, சாதிவாரி கணக்கெடுப்பினை மத்திய அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தி.மு.க. அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

இதனைக் கண்டித்து நான் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கைகள் விடுத்தனர்.

இந்தச் சூழ்நிலையில், நேற்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக வெளி வந்துள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

மத்திய அரசின் இந்த முடிவினை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் மனதார வரவேற்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"என் கணவர், குழந்தைகளுடன் வாழ உதவுங்கள்" - புதுச்சேரி முதல்வரிடம் உதவி கேட்கும் பாகிஸ்தான் பெண்

ப்பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் மக்கள் அனைவரையும் வெளியேற உத்தரவிட்டிருக்கும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கும் அதற்கான ஆணையை அனுப்பி வைத்திருக்கிறது. அதன் ... மேலும் பார்க்க

கடும் வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் என்ன?

அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. அதாவது மே 4-ம் தேதி தொடங்கி, மே 28-ம் தேதி வரை உள்ளது. அதற்குள்ளேயே, வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், 'பள்ளிகள் திறப்பு தள்ளிப்போடப்படு... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு: ``2011-ல் நடந்தது போல மீண்டும் நடக்கக் கூடாது" - மநீம தலைவர் கமல்ஹாசன்

நீண்ட கால எதிர்க்கட்சிகளின் அழுத்தத்துக்குப் பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என கேபினட் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் இந... மேலும் பார்க்க

உக்ரைனுடன் ஒப்பந்தம் போட்ட அமெரிக்கா: 'நான் இல்லையென்றால், புதின்...' ரஷ்யாவை சாடும் ட்ரம்ப்

நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேர்காணல் ஒன்றில் ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து பேசியுள்ளார். "புதினுக்கு முழு உக்ரைனுமே வேண்டும் என்று நினைக்கிறேன். நான் மட்டும் தேர்தலில் வெற்றி பெறவில்லை எ... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை: வங்கியின் அவமரியாதை; `புதிய சட்டத்தின்படி நடவடிக்கை தேவை' - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 'கட்டாயப்படுத்தி கடன் வசூலித்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும்' என்ற மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய சட்ட மசோதாவின்படி, கடன் வாங்கியவா் மற்றும் அவரது குடும்பத்தின... மேலும் பார்க்க