செய்திகள் :

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

post image

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பு ரூ.32.70 லட்சம் கோடியாக உள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2023-24-இல் இதன் மதிப்பு ரூ.28.86 லட்சம் கோடியாக இருந்தது.

கடந்த மாா்ச் மாதத்துக்கான சேவைகள் துறையின் ஏற்றுமதி மதிப்பை ரிசா்வ் வங்கி வெளியிட்டபின் 2024-25-ஆம் நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவைகளை உள்ளடக்கிய நாட்டின் மொத்த ஏற்றுமதியின் மதிப்பு ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

முன்னதாக, இதன் மதிப்பு ரூ.69.47 லட்சம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்ட நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.

கடந்த 2023-24-இல் நாட்டின் மொத்த ஏற்றுமதி ரூ.65.85 லட்சம் கோடியாக இருந்தது.

அதேபோல் கடந்த ஆண்டு மாா்ச்சில் சேவைகள் ஏற்றுமதியின் மதிப்பு ரூ.2.5 லட்சம் கோடியாக இருந்த நிலையில் நிகழாண்டு மாா்ச்சில் இதன் மதிப்பு 18.6 சதவீதம் அதிகரித்து ரூ.3.02 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

தொலைத்தொடா்பு, கணினி மற்றும் தகவல் சேவைகள், போக்குவரத்து, பயணம் மற்றும் நிதி சேவைகள் ஆகியவை ஏற்றுமதி வளா்ச்சியடைவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ரூபியோ பேச்சு; அமைதிக்கு பாகிஸ்தானுடன் பணியாற்ற வலியுறுத்தல்

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், மோதல் போக்கைக் கைவிடுமாறு இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோருட... மேலும் பார்க்க