செய்திகள் :

தில்லியில் மோசமான வானிலை: 3 விமானங்கள் திருப்பி விடப்பட்டன, 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

post image

புது தில்லி: தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றால் மூன்று விமானங்கள் திருப்பி விடப்பட்டன, 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய இரண்டு விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், ஒன்று அகமதாபாத்திற்கும் திருப்பி விடப்பட்டதாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.

விமான கண்காணிப்பு வலைத்தள தரவுகளின்படி, 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி சர்வதேச விமான நிலையம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் 5 மணிக்கு வெளியிட்டுள்ள ஒரு பதிவில், மோசமான வானிலை காரணமாக சில விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மோசமான வானிலை காரணமாக விமான நடவடிக்கைகளில் சில பாதிப்புகள் இருந்தததாகவும், தற்போது விமான நிலையத்தில் விமான நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன என தெரிவித்துள்ளது.

தில்லியில் கனமழை: வீடு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி

வட இந்தியாவின் சில பகுதிகளில் மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

தில்லிக்கு வரும் மற்றும் புறப்படும் சில விமானங்கள் சேவைகள் தாமதமாகியுள்ளன அல்லது திருப்பி விடப்படுகின்றன, இதனால் ஒட்டுமொத்த விமான சேவைகளுக்கான அட்டவணை பாதிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ள ஏர் இந்தியா, இடையூறுகளைக் குறைக்க எங்கள் தரப்பில் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்.

மேலும், பயணிகள் தங்களின் பயணத்திற்கு முன்பாக, விமான சேவைகளின் விவரங்களை அறிந்து கொண்டு விமான நிலையத்திற்கு வருமாறு ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நாட்டின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான விமான நிலையமாகும், இது நாள்தோறும் சுமார் 1,300 விமான இயக்கங்களைக் கையாண்டு வருகிறது.

தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா சிஎஸ்கே?

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வெளியேறியது.ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்க... மேலும் பார்க்க

சீமான் மீதான விசாரணை: இடைக்கால தடை நீட்டிப்பு

சீமானுக்கு எதிரான விஜயலட்சுமியின் புகார் குறித்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி, சீமானின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதிலளிக்க தமிழ்நாடு காவல்துறைக... மேலும் பார்க்க

அம்பேத்கர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்க தேடுதல் குழு!

அம்பேத்கர் சட்ட பல்கலை மற்றும் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்க தேடுதல் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடை... மேலும் பார்க்க

வேளாண் துறையில் 151 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 151 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வெள்ளிக்கிழமை முதல்வர் மு.... மேலும் பார்க்க

கர்நாடகம், தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம்

புதுதில்லி: கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளை சென்னைக்கு பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலிஜியம் (நீதிபதிகளை நீத... மேலும் பார்க்க

தஞ்சையில் மே 7ல் உள்ளூர்‌ விடுமுறை!

தஞ்சைப் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுவதால் மே 7-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா நட... மேலும் பார்க்க