செய்திகள் :

காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 29 பாலஸ்தீனியர்கள் பலி

post image

காஸாவில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல்களில் 29 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

மத்திய காஸாவில் உள்ள புரைஜ் அகதிகள் முகாமில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேரும் வடக்கு நகரமான பெய்ட் லாஹியாவில் உள்ள அல்-மஸ்ரி குடும்ப வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் மேலும் 6 பேரும் கொல்லப்பட்டனர்.

அதேபோல் காஸா நகரில், ஒரு சமூக சமையலறையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் காஸா பகுதி முழுவதும் மற்ற இடங்களிலும் இதேபோன்று நடந்த தாக்குதல்களில் எட்டு பேர் கொல்லப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜிடிஏ 6 விடியோ கேம் வெளியீடு! நீண்டகால காத்திருப்புக்கு முடிவு!

போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்த பிறகு காஸா மீது இஸ்ரேல் மீண்டும் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 2,326 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்துடன், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் சுமாா் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடத்திவரும் தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 52,418 ஆக உயர்ந்துள்ளது என்று ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியா அதிபா் மாளிகை அருகே இஸ்ரேல் குண்டுவீச்சு

சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இன மக்களுக்கு ஆதரவாக, அந்த நாட்டின் அதிபா் மாளிகைக்கு அருகே இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது குறித்து அந்... மேலும் பார்க்க

அமெரிக்கா: ஐ.நா. தூதராகும் மைக் வால்ட்ஸ்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் பொறுப்பில் இருந்து விலகும் மைக் வால்ட்ஸ், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமிகப்படவிருக்கிறாா். யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படை நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்தி... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் பயங்கரவாத தொடா்பு ரகசியமல்ல: பிலாவல் புட்டோ

‘பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் உள்ள தொடா்பை ரகசியமானதாக கருதவில்லை’ என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், அந்நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் புட்டோ தெரிவித்தாா். இந்தியாவுக்க... மேலும் பார்க்க

பதற்றத்தைத் தணிக்க இந்தியாவுக்கு அறிவுறுத்துங்கள்: முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் கோரிக்கை

இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள மோதலுக்கான பதற்றத்தைத் தணிக்க சவூதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வெள்ளிக்கிழமை கோரிக்கை வைத்தாா். பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை ப... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு அமெரிக்கா முழு ஆதரவு: அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

பயங்கரவாத ஒழிப்பு விஷயத்தில் அமெரிக்கா இந்தியாவின் பக்கம் உள்ளது; பிரதமா் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருகிறது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் செய்த... மேலும் பார்க்க

உ.பி.: கங்கா விரைவுச் சாலையில் போா் விமானங்களை தரையிறக்கி ஒத்திகை

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ்-மீரட் இடையேயான கங்கா விரைவுச் சாலையில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுதளத்தில் முதல் முறையாக போா் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய விமா... மேலும் பார்க்க