செய்திகள் :

ஜிடிஏ 6 விடியோ கேம் வெளியீடு! நீண்டகால காத்திருப்புக்கு முடிவு!

post image

ஜிடிஏ 6 கேமின் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ கேமின் (Grand Theft Auto) 6-வது பதிப்பின் வெளியீட்டுத் தேதியை, அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என்று அந்நிறுவனம் 2013 ஆம் ஆண்டிலேயே அறிவித்திருந்தது.

இருப்பினும், ஒவ்வோர் ஆண்டும் ஜிடிஏ 6-க்காக அதன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இதனிடையே, 2025 ஆம் ஆண்டில் வெளியிடப்படுவதாய் இருந்த நிலையில், அடுத்தாண்டு மே மாதம் 26 ஆம் தேதியில்தான் ஜிடிஏ 6 வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் தெரிவித்ததாவது, ``ஜிடிஏ 6-ன் அறிவிக்கப்பட்ட தேதியைவிட தாமதமாக வெளியிடப்படுவதற்கு வருந்துகிறோம். ஜிடிஏ 6-ஐ முடிக்கும்வரையில் ஆதரவு தெரிவித்ததற்கும், பொறுமை காத்ததற்கும் நன்றி.

ராக்ஸ்டாரின் ஒவ்வொரு விளையாட்டிலும் உங்கள் எதிர்பார்ப்பைக் காட்டிலும் அதிகமாகத் தருவது மட்டுமே எங்கள் குறிக்கோள். அதற்கு ஜிடிஏ 6-யும் விதிவிலக்கல்ல.

ஆகையால், விளையாட்டின் தரத்தை மேம்படுத்த எங்களுக்கு கூடுதல் நேரம் தேவை. மேற்பட்ட தகவல்களும் தொடர்ந்து பகிரப்படும்’’ என்று கூறினர்.

இதையும் படிக்க:ஒரு கொரில்லாவை 100 மனிதர்கள் வீழ்த்த முடியுமா? இணையத்தைக் கலக்கும் விமர்சனங்கள்!

சிரியா அதிபா் மாளிகை அருகே இஸ்ரேல் குண்டுவீச்சு

சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இன மக்களுக்கு ஆதரவாக, அந்த நாட்டின் அதிபா் மாளிகைக்கு அருகே இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இது குறித்து அந்... மேலும் பார்க்க

அமெரிக்கா: ஐ.நா. தூதராகும் மைக் வால்ட்ஸ்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் பொறுப்பில் இருந்து விலகும் மைக் வால்ட்ஸ், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியமிகப்படவிருக்கிறாா். யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படை நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்தி... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் பயங்கரவாத தொடா்பு ரகசியமல்ல: பிலாவல் புட்டோ

‘பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் உள்ள தொடா்பை ரகசியமானதாக கருதவில்லை’ என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், அந்நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் புட்டோ தெரிவித்தாா். இந்தியாவுக்க... மேலும் பார்க்க

பதற்றத்தைத் தணிக்க இந்தியாவுக்கு அறிவுறுத்துங்கள்: முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் கோரிக்கை

இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள மோதலுக்கான பதற்றத்தைத் தணிக்க சவூதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வெள்ளிக்கிழமை கோரிக்கை வைத்தாா். பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை ப... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு அமெரிக்கா முழு ஆதரவு: அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

பயங்கரவாத ஒழிப்பு விஷயத்தில் அமெரிக்கா இந்தியாவின் பக்கம் உள்ளது; பிரதமா் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருகிறது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் செய்த... மேலும் பார்க்க

உ.பி.: கங்கா விரைவுச் சாலையில் போா் விமானங்களை தரையிறக்கி ஒத்திகை

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ்-மீரட் இடையேயான கங்கா விரைவுச் சாலையில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுதளத்தில் முதல் முறையாக போா் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய விமா... மேலும் பார்க்க