செய்திகள் :

போர் பதற்றம், வான்வழி மூடல்... Air India நிறுவனத்தின் செலவீனங்கள் ரூ.5000 கோடி அதிகரிப்பு?

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது. இதனிடையே, பாகிஸ்தான் இந்திய விமானங்களுக்கு தனது வான் வழியை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதனால் ஏர் இந்தியா நிறுவனம் பெறும் நட்டத்தைச் சந்திக்க நேரிடும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

ராய்டர்ஸ் தளம் தெரிவிக்கும் கருத்தின்படி, பாகிஸ்தான் வான்வழியில் இந்திய விமானங்கள் பறக்க முடியாததால் Air India நிறுவனத்தின் செலவீனங்கள் வழக்கத்தை விட சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை அதிகரித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Air India
Air India

இந்த தடை தொடர்ந்தால் அடுத்த ஆண்டு இந்த செலவீனங்கள் இன்னும் உயரக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இந்த வான்வழி தடை நீடிக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 5000 கோடி இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் ராஜாங்க ரீதியிலான தடைகளை விதித்துள்ளன. இந்த தடைகளால் இருநாடுகளின் பொருளாதாரத்திலும் பாதிப்புகள் ஏற்படுகிறது.

Pakistan India
Pakistan India

இந்த தடைகள் எத்தனை நாட்கள் நீடித்திருக்கும் என்பது ராஜாந்திர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே தெரியவரும். மே 23ம் தேதி இவை முடிவுக்குக் கொண்டுவரப்படலாம் என என்.டி.டி.வி தளம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் இழப்புகளைச் சந்தித்தாலும், சர்வதேச விமான நிறுவனங்களின் விமானங்கள் இருநாட்டு வான் தடத்திலும் பறக்க எந்த தடையும் இல்லை என்பதனால் அவற்றுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறப்படுகிறது.

ஏர் இந்தியா நிறுவனம் பாதிக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட வேண்டும் என அரசுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நிலைமை சரியானபிறகு மானியங்களைத் திரும்பப் பெறுமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு தரப்பிலோ, ஏர் இந்தியா தரப்பிலோ வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பைத் திரும்பப் பெற்ற தமிழக அரசு; `உயிருக்கு அச்சுறுத்தல்' என நீதிமன்றத்தில் ஆஜராகாத சகாயம்!

மதுரை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகவும். பல்வேறு துறைகளில் உயரதிகாரியாகவும் பணியாற்றியவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். இவர், மதுரை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய காலத்தில் கிரானைட... மேலும் பார்க்க

பதிவாளர் அலுவலக கழிவறையில் ரூ.3 லட்சம்; லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையில் பறிமுதல்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நஞ்சியம்பாளையம் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உமா மகேஷ்வரி என்பவர் சார் பதிவாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் முறை... மேலும் பார்க்க

`வேல்முருகன் மாதிரி நாங்க பேசணும்னு எதிர்பார்க்கக் கூடாது..!’ - விசிக ஆளூர் ஷாநவாஸ் ஆவேசம்

``சட்டமன்றத்தை தி.மு.க அரசு மிகுந்த நாகரிகத்தோடு நடத்தியதாக சொல்கிறீர்கள்... பிறகு ஏன் அவை நடவடிக்கைகளை நேரலை செய்யவில்லை?”``சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலை செய்வோம் என்பது 2021-ல் தி.மு.க-வின் தேர்தல் வா... மேலும் பார்க்க

``சீமானின் 8% வாக்குகளெல்லாம் இப்போது குட்டிச் சுவராகிவிட்டது!" - சொல்கிறார் நாஞ்சில் சம்பத்

``பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது மத்திய அரசு. இதில் பா.ஜ.க-வுக்கு அரசியல் அஜெண்டா இருப்பதாக வீண் பழி சுமத்துகிறீர்களா?”``காஷ்மீரில் பாதுகாப்பை உறுதி செய்வதும், நா... மேலும் பார்க்க

தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கு; தந்தையின் பிழற்சாட்சி; தாயை கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் விடுதலை!

6 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவு கொலையும் செய்து, தனது சொந்த தாயையும் அடித்துக் கொலை செய்த தஷ்வந்த் வழக்கு தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.2017-ம் ஆண்டு சென்னையை அடுத்த போரூரில் 6 ... மேலும் பார்க்க

"ஊர்ந்து எனச் சொன்னால் உறுத்துகிறதா? தவழ்ந்து என மாற்றுங்கள்" - அதிமுகவின் அமளிக்கு ஸ்டாலின் பதில்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று (ஏப்ரல் 29) காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை தொடர்பான கேள்வி - பதில் விவாதங்கள் நடைபெற்றன.அப்போது சட்டம் ஒழுங்கை சரியில்லை... மேலும் பார்க்க