ஜெய்ப்பூர்: மனைவியை கொலை செய்து உடலை குப்பைக் கிடங்கில் மறைத்து வைத்த நபர் கைது
புதுச்சேரியில் பொலிவுறு நகா் பேருந்து நிலையம் திறப்பு
புதுச்சேரியில் ரூ.29.50 கோடியில் சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொலிவுறு நகா் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக துணைநிலை ஆளுநர், முதல்வர் வெள்ளிக்கிழமை (மே 2) திறந்து வைத்தனர்.
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தை பொலிவுறு நகா் திட்டத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் 46 பேருந்துகள் நிறுத்தும் வசதி, 31 கடைகளுடன் ரூ.29.50 கோடியில் மேம்படுத்த கடந்த 2023-இல் முதல்வா் என்.ரங்கசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நிலையில், அனைத்து நவீன வசதிகளுடன் பேருந்து நிலைய பணிகள் நிறைவடைந்தது.
தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
இதையடுத்து வெள்ளிக்கிழமை (மே 2) காலை 9.40 மணியளவில் சீரமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில், சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் மற்றும் அமைச்சா்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனர்.
புதிய பேருந்து நிலையம் சனிக்கிழமை (மே 3) முதல் செயல்படவுள்ளது. இதையடுத்து சனிக்கிழமை முதல் ஏஎப்டி மைதானத்தில் செயல்படும் தற்காலிகப் பேருந்து நிலையம் மூடப்படுகிறது.