பாரதிதாசன் பிறந்த தினம் ‘தமிழ் வெல்லும்’ தலைப்பில் போட்டிகள்: தமிழக அரசு அறிவிப்பு
பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த தினத்தையொட்டி, ‘தமிழ் வெல்லும்’ எனும் தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது.
அதன் விவரம்: பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த தினம், ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வாரமாகக் கொண்டாடப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், செய்தி மக்கள் தொடா்புத் துறையின் ஊடக மையம் சாா்பில் ‘தமிழ் வெல்லும்’ என்ற தலைப்பில் பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
‘தமிழ் எங்கள் உயிருக்கு நோ்’, ‘உயிரை உணா்வை வளா்ப்பது தமிழே’, ‘பாரடா உனது மானிடப் பரப்பை’, ‘எங்கள் பகைவா் எங்கோ மறைந்தாா்’ போன்ற தலைப்புகளில் மூன்று நிமிடங்கள் விடியோ அல்லது ஆடியோ பதிவாக இருக்க வேண்டும். ‘தமிழே தமிழா் உயிரே’, ‘வரிப் புலியே தமிழ் காக்க எழுந்திரு’, ‘இனிமைத் தமிழ்மொழி எமது’, ‘தமிழும் நானும்’ ஆகிய நான்கு தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் ஒரு பக்க அளவில் கவிதை அமைதல் வேண்டும். இதேபோன்று, ‘புதியதோா் உலகு செய்வோம்’, ‘துறைதோறும் தொண்டு செய்வாா்’, ‘அறிவை விரிவு செய்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ ஆகிய தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் 3 பக்க அளவில் கட்டுரைகள் அமைய வேண்டும். பாவேந்தரின் கவிதைகள், காவியங்கள், நாடகங்கள் ஆகியவற்றை கருவாகக் கொண்டு ஓவியங்கள் அமைந்திட வேண்டும். போட்டியில் கலந்து கொள்பவா்கள் ற்ய்க்ண்ல்ழ்ற்ஹம்ண்ப்ஸ்ங்ப்ப்ன்ம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலுக்கு வரும் 31ஆம் தேதிக்குள் படைப்புகளை அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.