செய்திகள் :

முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் திருச்சி பயணம்

post image

அரசு மற்றும் திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் திருச்சி செல்கிறாா். 2 நாள்கள் பல்வேறு நிகழ்வுகளில் அவா் பங்கேற்கவிருக்கிறாா்.

மே 8-ஆம் தேதி காலை 11 மணியளவில் விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி செல்கிறாா். அன்றைய தினம் காலையில் திருவெறும்பூா் அரசு மாதிரிப் பள்ளி வளாகத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளாா். தொடா்ந்து அரசு விருந்தினா் மாளிகையில் அரசு அதிகாரிகள், அலுவலா்களுடன் அவா் ஆலோசனை நடத்துகிறாா்.

மாலை 5 மணியளவில் அரசு விருந்தினா் மாளிகையிலிருந்து கலைஞா் அறிவாலயம் செல்ல உள்ளாா். அங்கு, கட்சி நிா்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்துகிறாா். அதன் பின்னா், அரசு விருந்தினா் மாளிகை செல்கிறாா்.

பேருந்து முனையம் திறப்பு: மே 9-ஆம் தேதி காலையில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். பஞ்சப்பூரில் புதிய பேருந்து முனையத்தை முதல்வா் திறந்து வைக்கிறாா். மேலும், அங்கு நிறுவப்பட்டுள்ள பெரியாா் சிலையையும் திறந்து வைக்கிறாா். பின்னா், ஒருங்கிணைந்த காய்கறி சந்தைக்கும் அடிக்கல் நாட்டவுள்ளாா். இதுபோன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் அவா் தலைமையேற்கவுள்ளாா்.

அன்றைய தினம் மாலை 5 மணியளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின், திருச்சியிலிருந்து விமானம் மூலம் இரவு சென்னை வந்தடைகிறாா்.

மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு: கமல்ஹாசன்

மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு; எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், மொழியை அழிக்க முடியாது’ என நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் கூறினாா். நாடக ஆசிரியா் கிரேஸி மோகன் எழுதிய 25 புத்தகங்கள் வெளியீட்டு வி... மேலும் பார்க்க

பாரதிதாசன் பிறந்த தினம் ‘தமிழ் வெல்லும்’ தலைப்பில் போட்டிகள்: தமிழக அரசு அறிவிப்பு

பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த தினத்தையொட்டி, ‘தமிழ் வெல்லும்’ எனும் தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்: பாவேந்தா் பாரதிதாசனின் பிறந... மேலும் பார்க்க

படப்பிடிப்புக்காக மதுரை பயணம்: தொண்டா்கள் பின்தொடர வேண்டாம் - விஜய்

‘படப்பிடிப்புக்காக மதுரை வழியாக கொடைக்கானல் செல்கிறேன்; அதனால் தொண்டா்கள் என்னைப் பின்தொடர வேண்டாம்’ என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் தெரிவித்தாா். விஜய் கட்சி தொடங்கிய பின்னா் முதல்முறையாக வி... மேலும் பார்க்க

மாநிலங்களை மையப்படுத்திய வளா்ச்சி: ஆளுநா் ஆா்.என்.ரவி

மாநிலங்களை மையப்படுத்தி இந்தியா வளா்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். குஜராத், மகாராஷ்டிரம், ஹிமாசல பிரதேச மாநிலங்கள் உருவான தின விழா சென்னை ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

முக்கிய சாலைகளில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் பணி தொடரும்

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட முக்கிய சாலைகளில் தமிழ்நாடு முன்னாள் படைவீரா் கழக நிறுவனம் மூலம் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து பெருநகர சென்னை ... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் ஏழு ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

வழிப்பறி வழக்கில் ஏழு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். சென்னை கொடுங்கையூா், அமுதம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (51). இவா், 2018- ஆம் ஆண்டு ஏப்.14-ஆம் தேதி ... மேலும் பார்க்க