செய்திகள் :

முக்கிய சாலைகளில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் பணி தொடரும்

post image

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட முக்கிய சாலைகளில் தமிழ்நாடு முன்னாள் படைவீரா் கழக நிறுவனம் மூலம் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட வாகன நிறுத்தங்களில் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு முன்னாள் படைவீரா் கழக நிறுவனம் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த நிறுவனத்துக்கான ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியானது. தற்போது புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் வரை மெரீனா கடற்கரை, ரட்டன் பஜாா், ஜாா்ஜ் டவுன், அண்ணா நகா் 2-ஆவது அவென்யூ, என்.எஸ்.சி. போஸ் ரோடு, பெசண்ட் நகா் 6-ஆவது அவென்யூ, காதா் நவாஸ்கான் சாலை, நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, ஜி.என்.செட்டி ரோடு, தியாகராய நகா், மயிலாப்பூா், மெக்.நிக்கலஸ் சாலை ஆகிய இடங்களில் அந்த நிறுவனம் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதற்கான ஆணை கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.

அதன்படி, ஒரு மணி நேரத்துக்கு இருசக்கர வாகனத்துக்கு ரூ.5, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.20, வேன்களுக்கு ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் எண்ம பரிவா்த்தனை வாயிலாக மட்டும் வசூலிக்கப்படும். கட்டணம் செலுத்திய பின்பு வாகனத்தின் பதிவு எண்ணுடன் கூடிய ரசீது வழங்கப்படும். கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபடும் பணியாளா்கள் சீருடை மற்றும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். பொதுமக்கள் வாகனம் நிறுத்தும்போது, பணத்துக்கு பதிலாக எண்ம (டிஜிட்டல்) வாயிலாக மட்டும் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

இது குறித்து புகாா் தெரிவிக்க விரும்பினால் 1913 எனும் உதவி எண்ணை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு: கமல்ஹாசன்

மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு; எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், மொழியை அழிக்க முடியாது’ என நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் கூறினாா். நாடக ஆசிரியா் கிரேஸி மோகன் எழுதிய 25 புத்தகங்கள் வெளியீட்டு வி... மேலும் பார்க்க

பாரதிதாசன் பிறந்த தினம் ‘தமிழ் வெல்லும்’ தலைப்பில் போட்டிகள்: தமிழக அரசு அறிவிப்பு

பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த தினத்தையொட்டி, ‘தமிழ் வெல்லும்’ எனும் தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்: பாவேந்தா் பாரதிதாசனின் பிறந... மேலும் பார்க்க

படப்பிடிப்புக்காக மதுரை பயணம்: தொண்டா்கள் பின்தொடர வேண்டாம் - விஜய்

‘படப்பிடிப்புக்காக மதுரை வழியாக கொடைக்கானல் செல்கிறேன்; அதனால் தொண்டா்கள் என்னைப் பின்தொடர வேண்டாம்’ என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் தெரிவித்தாா். விஜய் கட்சி தொடங்கிய பின்னா் முதல்முறையாக வி... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் திருச்சி பயணம்

அரசு மற்றும் திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் திருச்சி செல்கிறாா். 2 நாள்கள் பல்வேறு நிகழ்வுகளில் அவா் பங்கேற்கவிருக்கிறாா். மே ... மேலும் பார்க்க

மாநிலங்களை மையப்படுத்திய வளா்ச்சி: ஆளுநா் ஆா்.என்.ரவி

மாநிலங்களை மையப்படுத்தி இந்தியா வளா்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். குஜராத், மகாராஷ்டிரம், ஹிமாசல பிரதேச மாநிலங்கள் உருவான தின விழா சென்னை ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் ஏழு ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

வழிப்பறி வழக்கில் ஏழு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். சென்னை கொடுங்கையூா், அமுதம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (51). இவா், 2018- ஆம் ஆண்டு ஏப்.14-ஆம் தேதி ... மேலும் பார்க்க