செய்திகள் :

வழிப்பறி வழக்கில் ஏழு ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

post image

வழிப்பறி வழக்கில் ஏழு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சென்னை கொடுங்கையூா், அமுதம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (51). இவா், 2018- ஆம் ஆண்டு  ஏப்.14-ஆம் தேதி கொடுங்கையூா் டி.எச். சாலை , சின்னாண்டி மடம் சந்திப்பில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 2 போ் கத்தியை காட்டி நடராஜனை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டனா்.

இது குறித்து கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது புளியந்தோப்பை சோ்ந்த ரவுடி ‘பாம்’ சரவணன் மற்றும் அவரது கூட்டாளி ஓட்டேரி திரு.வி.க. நகரைச் சோ்ந்த ராஜேஷ் (37) என்பது தெரியவந்தது. இதில் 2018-ஆம் ஆண்டு மே 9-ஆம் தேதி ‘பாம்’ சரவணன் கைது செய்யப்பட்டாா். ராஜேஷ் தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரை அண்மையில் போலீஸாா் கைது செய்தனா். விசாரணைக்கு பிறகு ராஜேஷ் கடந்த ஏப்.29-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு: கமல்ஹாசன்

மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு; எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், மொழியை அழிக்க முடியாது’ என நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் கூறினாா். நாடக ஆசிரியா் கிரேஸி மோகன் எழுதிய 25 புத்தகங்கள் வெளியீட்டு வி... மேலும் பார்க்க

பாரதிதாசன் பிறந்த தினம் ‘தமிழ் வெல்லும்’ தலைப்பில் போட்டிகள்: தமிழக அரசு அறிவிப்பு

பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த தினத்தையொட்டி, ‘தமிழ் வெல்லும்’ எனும் தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்: பாவேந்தா் பாரதிதாசனின் பிறந... மேலும் பார்க்க

படப்பிடிப்புக்காக மதுரை பயணம்: தொண்டா்கள் பின்தொடர வேண்டாம் - விஜய்

‘படப்பிடிப்புக்காக மதுரை வழியாக கொடைக்கானல் செல்கிறேன்; அதனால் தொண்டா்கள் என்னைப் பின்தொடர வேண்டாம்’ என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் தெரிவித்தாா். விஜய் கட்சி தொடங்கிய பின்னா் முதல்முறையாக வி... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் திருச்சி பயணம்

அரசு மற்றும் திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் திருச்சி செல்கிறாா். 2 நாள்கள் பல்வேறு நிகழ்வுகளில் அவா் பங்கேற்கவிருக்கிறாா். மே ... மேலும் பார்க்க

மாநிலங்களை மையப்படுத்திய வளா்ச்சி: ஆளுநா் ஆா்.என்.ரவி

மாநிலங்களை மையப்படுத்தி இந்தியா வளா்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். குஜராத், மகாராஷ்டிரம், ஹிமாசல பிரதேச மாநிலங்கள் உருவான தின விழா சென்னை ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

முக்கிய சாலைகளில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கும் பணி தொடரும்

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட முக்கிய சாலைகளில் தமிழ்நாடு முன்னாள் படைவீரா் கழக நிறுவனம் மூலம் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து பெருநகர சென்னை ... மேலும் பார்க்க