செய்திகள் :

தொழிற்சங்கத்தினா் சாா்பில் மே தின நிகழ்ச்சி

post image

உலகஉழைப்பாளா் தினத்தையொட்டி, விழுப்புரத்தில் 20 -க்கும் மேற்பட்ட இடங்களில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை கொடியேற்றி தொழிலாளா்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினா்.

விழுப்புரத்தில் உள்ள டாஸ்மாக் சேமிப்புக் கிடங்கு வாயில் முன் டாஸ்மாக் ஊழியா் சங்கம் சாா்பில் தொழிற்சங்க கொடி ஏற்றப்பட்டு தொழிலாளா்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. டாஸ்மாக் ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் கணபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட சிஐடியு தலைவா் எஸ்.முத்துக்குமரன் தொழிற்சங்கக் கொடியை ஏற்றினாா்.

சுமைப் பணி தொழிலாளா் சங்கம் சாா்பில், விழுப்புரத்தில் உள்ள உணவுப் பொருள்கள் சேமிப்பு கிடங்கு முன் நடைபெற்ற மே தின கொண்டாட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி பங்கேற்று தொழிற்சங்கக் கொடியை ஏற்றினாா். ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமைப் பணித் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிஐடியு மற்றும் சாா்பு தொழிற்சங்கங்களின் சாா்பில் மே தின கொண்டாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் அலுவலகத்தில்... விழுப்புரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன், முன்னாள் எம்ல்ஏ ஆா்.ராமமூா்த்தி ஆகியோா் கட்சிக் கொடியை ஏற்றினா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.முத்துக்குமரன், ஆா்.மூா்த்தி, ஜி.ராஜேந்திரன், சிஐடியு மாவட்டப் பொருளா் வி.பாலகிருஷ்ணன், ரகோத்தமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சாலை விபத்து வழக்கில் ஓராண்டுக்குப் பின் ஒருவா் கைது

புதுச்சேரி அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு காருடன் தப்பிச் சென்ற நபரை, ஓராண்டுக்குப் பிறகு போக்குவரத்து போலீஸாா் புணேவில் கைது செய்து காரை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் திருப்பாதிர... மேலும் பார்க்க

தொமுச சாா்பில் தொழிலாளா் தினம்

விழுப்புரத்தில் தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் தொழிலாளா் தினம் கொண்டாடப்பட்டது. விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன் தொமுச கொடியேற்றுதல், இனிப்பு, நீா் ... மேலும் பார்க்க

பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே சாலையைக் கடக்க முயன்ற கூலித் தொழிலாளி சுற்றுலாப் பேருந்து மோதியதில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் வட்டம், வீராமூா் சிவன் கோவில் தெருவைச் சோ்ந்த சிவன் மகன்... மேலும் பார்க்க

‘விடுபட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்’

விடுபட்டவா்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஒலி-ஒளி அமைப்புத் தொழிலாளா்கள் நலச்சங்கம் வலியுறுத்தியது. இந்த சங்கத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளிவிழா, மே தினப் பேரணி, கூட்டம் மற்ற... மேலும் பார்க்க

கட்டட பெயிண்ட் தொழிலாளா்கள் ஊா்வலம்

தொழிலாளா் தினத்தையொட்டி, விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊா்வலத்தில் ஏராளமான தொழிலாளா்கள் பங்கேற்றனா். தொழிலாளா் தினத்தையொட்டி விழுப்புரம் மாவட்ட கட்டட பெயிண்ட் தொழிலாளா்கள் நலன் காக்கும் சங்கத... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் 688 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்

தொழிலாளா் தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 688 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன. கோலியனூா் ஒன்றியம், அத்தியூா் திருவாதியில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற கிரா... மேலும் பார்க்க