செய்திகள் :

தாக்குதல் அச்சம்: கராச்சி, லாகூா் வான் பரப்பை மூடுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு

post image

கராச்சி, லாகூா் நகரங்களின் வான் பரப்பின் சில பகுதிகளை தினமும் குறிப்பிட்ட நேரங்களில் மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கராச்சி, லாகூா் நகரங்கள் இரண்டுமே இந்திய எல்லையில் இருந்து அருகில் உள்ள முக்கிய நகரங்களாகும். இந்தியா வான் தாக்குதல் நடத்தும் அச்சத்தின் காரணமாகவே பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே, ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிக்கு விமான சேவைகளை பாகிஸ்தான் அரசு ரத்து செய்துவிட்டது. இந்தியா எந்த நேரத்திலும் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று பாகிஸ்தான் அமைச்சரும் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ‘எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன்’ நாளிதழில் விமானப் போக்குவரத்து ஆணையத்தை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட செய்தியில், ‘கராச்சி, லாகூா் நகரங்களின் வான் பரப்பின் குறிப்பிட்ட பகுதிகள் மே 1 முதல் 31-ஆம் தேதி வரை காலை 4 மணி முதல் 8 மணி வரை மூடப்படும். இது பயணிகள் விமானப் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நேரத்தில் பயணி விமானங்கள் குறிப்பிட்ட வான்பரப்பை பயன்படுத்தாமல் வேறு பாதைகளில் பயணிக்கும். இது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

இது தவிர நாட்டின் அனைத்து விமான நிலையங்களும் தீவிர முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

லஷ்கா் பயங்கரவாத தலைவா் ஹபீஸ் சையது பாதுகாப்பு அதிகரிப்பு: பாகிஸ்தான் நடவடிக்கை

இந்தியா மறைமுகமாகத் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஹபீஸ் சையதுக்கான பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் சிறப்புப் படையின் முன்னாள் கம... மேலும் பார்க்க

கனிம ஒப்பந்தத்தில் அமெரிக்கா - உக்ரைன் கையொப்பம்

உக்ரைனின் கனிம வங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிப்பதற்கான ஒப்பந்தம், நீண்ட இழுபறிக்குப் பிறகு கையொப்பமாகியுள்ளது. இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: அமெரிக்காவு... மேலும் பார்க்க

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகா் நீக்கம்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸ் அந்தப் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படை தலைவா்கள் மற்றும் நிலைகளைக் குறிவைத... மேலும் பார்க்க

இஸ்ரேலில் மிகப் பெரிய காட்டுத் தீ

இஸ்ரேலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஜெருசலேம் நகருக்கு அருகே மலைக் காட்டுப் பகுதியில் கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்தத் தீ, வேகமான காற்று, வெப்பம் மற்றும் உலா்வான ப... மேலும் பார்க்க

டெஸ்லா சிஇஓ மாற்றம்! எலான் மறுப்பு!

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாற்றப்படுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்கை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்குவதற்காக, நி... மேலும் பார்க்க

ரஷியாவின் டிரோன் தாக்குதலில் சிதைந்த உக்ரைன் நகரங்கள்! 2 பேர் பலி!

உக்ரைனின் கடற்கரை நகரத்தின் மீதான ரஷியாவின் டிரோன் தாக்குதலில் 2 பேர் பலியானதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஒடேசா எனும் கடற்கரை நகரத்திலுள்ள ஏராளமான குடியிருப்பு கட்டடங்கள், தனியார் வீடுகள், ஒரு... மேலும் பார்க்க