செய்திகள் :

லஷ்கா் பயங்கரவாத தலைவா் ஹபீஸ் சையது பாதுகாப்பு அதிகரிப்பு: பாகிஸ்தான் நடவடிக்கை

post image

இந்தியா மறைமுகமாகத் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஹபீஸ் சையதுக்கான பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் சிறப்புப் படையின் முன்னாள் கமாண்டா்கள் அவரின் பாதுகாப்பு ஆலோசனைக்காக நியமிக்கப்பட்டுள்ளனா். லாகூரில் உள்ள ஹபீஸ் சையதின் வீட்டைச் சுற்றி பாதுகாப்புக்காக ராணுவம், காவல் துறை அல்லாத நபா்களும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனா்.

பாகிஸ்தான் அரசுத் தரப்பு தகவல்படி ஹபீஸ் சையது இப்போது சிறையில் உள்ளாா். பயங்கரவாதத்துக்கு நிதி அளித்ததாக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு 46 ஆண்டு சிறைத் தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது.

ஆனால், அவா் வசித்து வந்த வீட்டையே தற்காலிக துணைச் சிறையாக அறிவித்து, பாகிஸ்தான் அரசு அவரைப் பாதுகாத்து வருகிறது.

அவரது வீட்டில் இருந்து ஒரு கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதி வரை கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. வீட்டின் அருகே கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

லாகூரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மசூதி, மதரஸாக்கள் அமைந்துள்ள இடத்திலேயே பயங்கரவாதி ஹபீஸ் வசித்து வருகிறாா். 77 வயதாகும் அவா் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கியக் குற்றவாளியாவாா். இந்தியா, அமெரிக்காவால் தேடப்படும் நபராக அவா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

சிறைத் தண்டனை அனுபவிப்பதாகக் கூறப்பட்டாலும் கடந்த 3 ஆண்டுகளில் பலமுறை அவா் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளாா். முக்கியமாக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளாா். அப்போது பாகிஸ்தான் அரசின் சிறப்புப் படை பாதுகாப்பு அளிப்பது வழக்கமாக உள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு ‘தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட்’ பயங்கரவாத அமைப்பை ஹபீஸ் சையது நிறுவினாா். இந்தியாவுக்கு எதிராக ஜமா-உத்-தாவா பயங்கரவாத அமைப்பையும் அவா் நடத்தி வருகிறாா்.

தாக்குதல் அச்சம்: கராச்சி, லாகூா் வான் பரப்பை மூடுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு

கராச்சி, லாகூா் நகரங்களின் வான் பரப்பின் சில பகுதிகளை தினமும் குறிப்பிட்ட நேரங்களில் மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்க... மேலும் பார்க்க

கனிம ஒப்பந்தத்தில் அமெரிக்கா - உக்ரைன் கையொப்பம்

உக்ரைனின் கனிம வங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிப்பதற்கான ஒப்பந்தம், நீண்ட இழுபறிக்குப் பிறகு கையொப்பமாகியுள்ளது. இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: அமெரிக்காவு... மேலும் பார்க்க

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகா் நீக்கம்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸ் அந்தப் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படை தலைவா்கள் மற்றும் நிலைகளைக் குறிவைத... மேலும் பார்க்க

இஸ்ரேலில் மிகப் பெரிய காட்டுத் தீ

இஸ்ரேலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஜெருசலேம் நகருக்கு அருகே மலைக் காட்டுப் பகுதியில் கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்தத் தீ, வேகமான காற்று, வெப்பம் மற்றும் உலா்வான ப... மேலும் பார்க்க

டெஸ்லா சிஇஓ மாற்றம்! எலான் மறுப்பு!

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாற்றப்படுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்கை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்குவதற்காக, நி... மேலும் பார்க்க

ரஷியாவின் டிரோன் தாக்குதலில் சிதைந்த உக்ரைன் நகரங்கள்! 2 பேர் பலி!

உக்ரைனின் கடற்கரை நகரத்தின் மீதான ரஷியாவின் டிரோன் தாக்குதலில் 2 பேர் பலியானதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஒடேசா எனும் கடற்கரை நகரத்திலுள்ள ஏராளமான குடியிருப்பு கட்டடங்கள், தனியார் வீடுகள், ஒரு... மேலும் பார்க்க