செய்திகள் :

`அமெரிக்கா இந்தியாவுடன் நிற்கிறது' - அமெரிக்க செயலாளருடன் ராஜ்நாத் சிங் பேசியது என்ன?

post image

பாகிஸ்தானுடனான போர் பதட்டத்துக்கு இடையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் உடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அலுவலக எக்ஸ் தள பக்கத்தில், "அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் காலையில் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்குடன் பேசினார்.

தொலைபேசி உரையாடலில், "ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில், அப்பாவி பொதுமக்களின் இழப்புக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்" எனக் கூறப்பட்டுள்ளது.

Pete Hegseth
Pete Hegseth

"பாகிஸ்தான் அம்பலப்பட்டுள்ளது" - Rajnath Singh

மேலும் அந்தப் பதிவில், "பீட் ஹெக்செத் அமெரிக்கா இந்தியாவுடன் ஒற்றுமையாக நிற்கிறது என்றும் இந்தியாவின் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமையை ஆதரிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் அமெரிக்க அரசின் வலுவான ஆதரவை மீண்டும் உறுதி செய்துள்ளார்." எனக் கூறப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்திடம், "பாகிஸ்தான் உலக தீவிரவாதத்துக்கு எரிபொருள் ஊற்றி பிராந்தியத்தின் அமைதியை சீர்குலைக்கும் மோசமான நாடு என்பது அம்பலப்பட்டுள்ளது.

உலகம் இனியும் தீவிரவாதம் பற்றி கண்ணைக் கட்டிக்கொண்டு இருக்க முடியாது" எனக் கூறியதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி தளம் தெரிவிக்கிறது.

India vs Pakistan

India vs Pakistan
India vs Pakistan

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர்பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தான் இந்திய எல்லையில் பாதுகாப்பு படைகளைக் குவித்து வருகிறது.

பாகிஸ்தான் இராணுவம், கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைத் தாண்டிய பகுதிகளில் (LoC) ஏப்ரல் 27-28 தேதிகளில் போர் நிறுத்த விதிகளை மீறியதாகவும் அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்ததாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

முன்னதாக கடந்த புதன்கிழமை வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் பஹல்காமில் நடந்த 26 பேரின் மரணத்துக்கு காரணமாக அமைந்த தீவிரவாத தாக்குதல் பற்றி உரையாடினார்.

அதன்பிறகான எக்ஸ்தள பதிவில், குற்றவாளிகள், அவர்களுக்கு ஆதரவளிப்பவர்கள் மற்றும் திட்டம் தீட்டுபவர்கள் அனைவரும் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் எனப் பதிவிட்டார்.

"பிறகு எதற்கு 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்?" - அன்பில் மகேஸ்க்கு வானதி சீனிவாசன் கேள்வி

கோவை சித்தாப்புதூரில் பா.ஜ.க எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யாருக்கு என்ன தேவையோ அதைக் ... மேலும் பார்க்க

Pahalgam : ‘முஸ்லிம்கள், காஷ்மீரிகளுக்கு எதிராக வெறுப்பு...’ - கொல்லப்பட்ட வீரரின் மனைவி வேண்டுகோள்

ஹரியானாவின் கர்னாலைச் சேர்ந்த 26 வயது இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வாலுக்கு கடந்த மாதம்16-ம் தேதி திருமணமும், 19-ம் தேதி திருமண வரவேற்பும் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு மனைவியுடன் ஹனி... மேலும் பார்க்க

War: தொடரும் மரண ஓலங்கள்; ஒவ்வொரு போரிலும் பாதிக்கப்படும் எளிய மக்கள் - போர் ஏன் கூடாது? |Explained

"எங்களது 7 மற்றும் 9 வயது குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதய நோய் பாதிப்பு ஏற்பட்டது. குழந்தைகளின் உயர் சிகிச்சைக்காக டெல்லி வந்திருக்கிறோம். ஏற்கனவே ரூ.1 கோடி வரை செலவு செய்திருக்கிறோம். பாகிஸ்தானிய தம்ப... மேலும் பார்க்க

விதிகளை மீறி விளம்பர பேனர்கள்; கட்டுப்பட மறுக்கும் அரசியல் பிரமுகர்கள் - வேதனையில் புதுச்சேரி மக்கள்

புதுச்சேரியில் திறந்தவெளி அழகு சீர்குலைப்பு தடுப்புச் சட்டம், கடந்த 2000-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அந்த சட்டத்தின்படி பொது இடங்களில் அனுமதியின்றிபேனர்கள்மற்றும் கட்-அவுட்கள் வைப்பது தடை செய்யப்பட்ட... மேலும் பார்க்க

'பஸ்ஸைப் பாதியில் நிறுத்தி டிரைவர் தொழுகை' - வைரல் வீடியோ; அமைச்சரின் அதிரடி நடவடிக்கை

கர்நாடகாவில் ஹூப்பள்ளி - ஹவேரி சாலையில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் சாலையோரமாகப் பேருந்தை நிறுத்திவிட்டு தொழுகை செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், டிரைவர் சீட்டிற்குப் பின் இருக... மேலும் பார்க்க