செய்திகள் :

புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?" - முதல்வர் பதில்

post image

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த மலையாள ராப் பாடகர் ஹிரண்தாஸ் முரளி(30). பள்ளியில் படிக்கும்போது அவரது நிறத்தை வைத்துக் கிண்டல் செய்யும் வகையில் வேடன் என நண்பர்கள் அழைத்துள்ளனர்.

மலையாள ராப் பாடல்கள் மூலம் பிரபலம் அடைந்த ஹிரண்தாஸ் முரளி தனது பெயரை ராப்பர் வேடன் என வைத்துக்கொண்டார்.

வேடன் தனது நண்பர்களுடன் ஒரு அறையில் இருக்கும் போது போலீஸார் சோதனை நடத்தி அவரிடம் இருந்து கடந்த திங்கள்கிழமை கஞ்சா பொட்டலத்தைப் பறிமுதல் செய்ததுடன் வேடனைக் கைதுசெய்தனர்.

அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவரது கழுத்தில் புலிப்பல் டாலர் மாலை கிடந்ததைக் கண்டுபிடித்தனர்.

அது வேட்டையாடப்பட்ட புலியின் பல்லாக இருக்கலாம் எனக்கருதிய வனத்துறையினர் அவரைக் கைது செய்து பெரும்பாவூர் ஜுடிசியல் ஃபர்ஸ்ட் கிளாஸ் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர்.

அப்போது வேடன் சார்பில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 'வேடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிடுவார். ஆதாரங்களை அழித்து விடுவார். எனவே ஜாமின் வழங்கக்கூடாது' என வனத்துறை சார்பில் கோர்ட்டில் வாதிடப்பட்டது.

கழுத்தில் புலிப்பல் டாலர் மாலையுடன் வேடன்
கழுத்தில் புலிப்பல் டாலர் மாலையுடன் வேடன்

'அந்த டாலர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரஞ்சித் என்ற ரசிகர் பரிசாக வழங்கியது. அது உண்மையான புலிப்பல் எனத் தெரிந்திருந்தால் நான் பயன்படுத்தியிருக்க மாட்டேன்.

சாதாரண மனிதருக்கு அது உண்மையான புலிப்பல் என்பதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்.

பரிசாகக் கொடுத்தவரை அடையாளம் காட்டுவதற்கு நான் போலீசுடன் ஒத்துழைப்பேன்' என்று வேடன் தெரிவித்தார்.

வாதங்களைக் கேட்ட கோர்ட், 'ஒவ்வொரு வியாழக்கிழமையும் காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராக வேண்டும். கேரளாவை விட்டு வெளியே செல்லக்கூடாது.

பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் வேடனுக்கு ஜாமின் வழங்கியது.

மலையாள ராப் பாடகர் வேடன்
மலையாள ராப் பாடகர் வேடன்

ராப்பர் வேடனின் கழுத்தில் கிடந்த புலிப்பல் டாலரின் உண்மைத்தன்மை குறித்து கண்டறிய விஞ்ஞான பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு நடிகர் மோகன்லால் யானை தந்தங்களை வைத்திருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் அவரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தவில்லை.

பட்டியலின இளைஞர் என்பதால் வேடனை வேண்டும் என்றே வேட்டையாடுகிறார்கள் எனச் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்தது.

இதை அடுத்து அரசியல் கட்சியினர் சிலர் வேடனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "போதைக்கு எதிரான போராட்டத்தில் முன்னேறிய சமூகம், பட்டியலினச் சமூகம் என்ற வித்தியாசம் இல்லை. ஆனால் புலிப்பல் வைத்தது உள்ளிட்ட விஷயங்களில் நிதானமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

குறிவைக்கப்படும் முதியவர்கள்; மேற்கு மண்டலத்தில் தொடரும் ஆதாயக் கொலைகள்; பின்னணி என்ன?

மேற்கு மண்டலத்தின் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.இந்த இரண்டு மாவட்டங்களிலும் பெரும்பாலானவை கிராமப் பகுதிகளாக உள்ளதால், விவசாயிகள் தோட்டத்து வீட்டில் அதி... மேலும் பார்க்க

பள்ளி மதிய உணவில் விழுந்த பாம்பு; சாப்பிட்ட 100 மாணவர்கள் பாதிப்பு! - NHRC விசாரணை, நடந்தது என்ன?

மதிய உணவுத் திட்டம் கல்வி மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியமானது. இதில் நடைபெறும் தவறுகள் நிறைய குழந்தைகளின் உயிருக்கும், உடல்நலத்துக்கும் ஆபத்து விளைவிக்கும். அரசு திட்டங்களை பாதுகாப்புடன் செ... மேலும் பார்க்க

சென்னை: காதலிக்க மறுத்த மாணவி... பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ஐடி ஊழியர் - அதிர்ச்சி சம்பவம்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர், தாழம்பூர் காலல் நிலையம் பின்புறத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். மாணவியைச் சந்திக்க அவர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பாஜக அமைச்சர் பங்கஜா முண்டே-க்கு ஆபாச `மெசேஜ்' அனுப்பியவர் கைது; சைபர் கிரைம் விசாரணை

மகாராஷ்டிராவில் அமைச்சராக இருக்கும் பங்கஜா முண்டே-க்கு கடந்த சில நாள்களாக மர்ம நபர் ஒருவர் அடிக்கடி போன் செய்து ஆபாசமாக பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தான். அதோடு பங்கஜா முண்டேயின் போனுக்கு ஆபாச மெசேஜ்களை... மேலும் பார்க்க

தேனி: இடப்பிரச்னையில் இருவர் வெட்டிக்கொலை; ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது - நடந்தது என்ன?

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் வசித்து வருபவர் சுந்தர் (55). இவர் வீட்டின் எதிர்ப்புறம் வசித்து வருபவர் ராஜேந்திரன் (60). இருவருக்கும் கடந்த ஓராண்டாக இடப்பிரச்னை இருந்து வந்த... மேலும் பார்க்க

ஈரோடு: தோட்டத்து வீட்டில் வசித்த வயதான தம்பதி அடித்துக் கொலை; நகைகள் கொள்ளை; என்ன நடந்தது?

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி வெளாங்காட்டு வலசு பகுதியில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமசாமி (75).இவரது மனைவி பாக்கியம்மாள் (65). இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்... மேலும் பார்க்க