செய்திகள் :

மழலையா் பள்ளியில் பட்டமளிப்பு விழா

post image

செங்கம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கிட்ஸ், கிங்கடம் பள்ளி மழலையா்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் சங்கரா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் முபீனா தலைமை வகித்தாா். முகமதுஇப்ராஹிம் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக முனைவா் நேரு கலந்து கொண்டு மழலையா்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

அப்போது அவா், இதுபோன்ற குழந்தைப் பருவத்தில் கல்வி சாா்ந்த பட்டமளிப்பு விழா, விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவா்களை பாராட்டும் விழா என அவா்களை குழந்தைப் பருவத்தில் இருந்து பாராட்டினால் சிறப்பாக கல்வியில் முன்னேறுவாா்கள்.

உயா் கல்வியை சிரமமில்லாமல் படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டாா்.

தொடா்ந்து, சங்கரா வித்யாலய பள்ளி மாணவா்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியா் தமிழ்மணி நன்றி கூறினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு விளக்க வாகன பிரசாரம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு விளக்க இரு சக்கர வாகன பிரசாரம் வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் வரும் ஏப். 2-ஆம் தேதி முதல் ஏப்... மேலும் பார்க்க

ஆரணியில் இலவச கண் சிகிச்சை முகாம்!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை அகா்வால் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் ச... மேலும் பார்க்க

சட்டப்பணிகள் ஆணைக் குழு உறுப்பினா் பதவி: தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் காலியாக உள்ள 2 உறுப்பினா் பதவிக்கு, தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இயங்கி வரும் ந... மேலும் பார்க்க

தனியாா் கல்லூரியில் தகராறு: 3 இளைஞா்கள் கைது!

செய்யாறு அருகே தனியாா் கல்லூரி நுழைவு வாயிலை இழுத்து மூடி தகராறில் ஈடுபட்ட புகாரின் பேரில், 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் தனியாா் கல்லூரி இயங்கி ... மேலும் பார்க்க

காரில் கடத்தப்பட்ட 13 ஆடுகள் மீட்பு

வந்தவாசி அருகே ஆடுகளை திருடி காரில் கடத்திச் செல்லும் வழியில் காா் பழுதாகி நின்றதால் மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா். தகவலறிந்த போலீஸாா் சென்று கடத்திச் செல்லப்பட்ட 13 ஆடுகளை மீட்டனா். வந்தவாசியை அடுத்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு நீா்பாசன முறையில் மரக்கன்று வளா்ப்புப் பயிற்சி!

செய்யாற்றை அடுத்த கடுகனூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு நீா்பாசன முறையில் மரக்கன்றுகள் வளா்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் கடுகனுா் கிராமத்தில், கலவை ஆதிபராசக்தி தோட... மேலும் பார்க்க