செய்திகள் :

மே 29, 30ல் நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்! இன்று 8 மாவட்டங்களில் கனமழை!

post image

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மே 29, 30 ஆகிய 2 நாள்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரவியுள்ளது. குறிப்பாக இதனால் மேற்கு தொடர்ச்சி மலையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த 3 நாள்கள் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் நாளையும் நாளை மறுநாளும்(மே 29, 30) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (மே 28) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் குமரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மே 29, 30 தேதிகளில் நீலகிரி, கோவையில் அதிகனமழையும் தேனி, தென்காசி, திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் மிக கனமழையும் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசேகரன் குற்றவாளி! ஜூன் 2-ல் தண்டனை: நீதிபதி அறிவிப்பு

மகப்பேறு விடுப்பு! அரசு பெண் ஊழியர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம்! அரசாணை சொல்வது என்ன?

தமிழக அரசு பெண் ஊழியர்களின் ஓராண்டு மகப்பேறு விடுப்புக் காலம், தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மகப்பேறு விடுப்புக் ... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: ஒரே கருவியை பயன்படுத்திய பல் மருத்துவமனை! 8 பேர் பலி

திருப்பத்தூரில் தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் 8 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடியில் 2023 ஆம் ஆண்டில் தனியால் பல் சிகிச்சை மருத்துவமனையில் ... மேலும் பார்க்க

7வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவு!

ஏழாவது மாநில நிதி ஆணையத்தினை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் க... மேலும் பார்க்க

3 நாள்கள் தொடர் ஆலோசனை! அன்புமணியின் அடுத்த நகர்வு என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வியாழக்கிழமை முன்வைத்த நிலையில், அன்புமணி கட்சி நிர்வாகிகள் உடன் 3 நாள்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தவுள்ளார்.ப... மேலும் பார்க்க

கரையைக் கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுத... மேலும் பார்க்க

கமல்ஹாசன் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை: அப்பாவு

தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,"அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தி... மேலும் பார்க்க