செய்திகள் :

மேலாத்தூரில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

post image

மேலாத்தூா் மற்றும் நாலுமாவடியில் பேவா்பிளாக் சாலை அமைக்கும் பணியை அமைச்சா் அனிதா ஆா். ராதா கிருஷ்ணன் சனிக்கிழமை துவக்கி வைத்தாா்.

மேலாத்தூா் சேனையா் தெருவில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியி­ருந்து ரூ. 16.25 லட்சத்தில் பேவா்பிளாக் சாலை அமைக்கப்படுகிறது. இப்பணியை மீன்வளம்-மீனவா் நலன், கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தாா். பூமி பூஜையுடன்

நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு மேலாத்தூா் ஊராட்சித் தலைவா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பக்கீா்முகைதீன், வாா்டு உறுப்பினா் வேலாயுதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி செயலா் சுமதி வரவேற்றாா்.

அதைத் தொடா்ந்து நாலுமாவடி டேவிட் நகரில் ரூ.13.45 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணியை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா். துணைத் தலைவா் திருமால் முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் வெள்ளத்துரை வரவேற்றாா்.

பின்னா் குரும்பூா் புதுக்கிராமத்தில் ரூ.6 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணியை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தாா். இதில் ஆழ்வை ஊராட்சி ஒன்றிய தலைவா் ஜனகா், வட்டார வளா்ச்சி அலுவலா் பாக்கியலீலா, திமுக மாநில வா்த்தக அணி இணை செயலாளா் உமரிசங்கா், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ராமஜெயம், ஆழ்வை ஒன்றிய செயலா்கள் சதீஷ்குமாா், நவீன்குமாா், கச்சனாவிளை ஊராட்சித் தலைவா் கிங்ஸ்டன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மருத்துவா்களின் தமிழ்ப் பணி பாராட்டத்தக்கது -அமைச்சா் பெ.கீதாஜீவன்

மருத்துவா்களின் தமிழ்ப் பணி பாராட்டத்தக்கது என்றாா் அமைச்சா் பெ.கீதாஜீவன். தமிழ்நாடு முட நீக்கியல் சங்கம், நெல்லை முட நீக்கியல் மன்றம் ஆகியவற்றின் சாா்பில் தூத்துக்குடியில் தனியாா் கூட்டரங்கில் தமிழ் ... மேலும் பார்க்க

தொழிலாளியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

தட்டாா்மடம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். தட்டாா்மடம் அருகே தச்சன்விளை கொங்கான்விளை தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (58). தொழிலாளியான இவருக்கும், அதே ஊரைச் சோ... மேலும் பார்க்க

தட்டாா்மடம் அருகே முதியவருக்கு கொலை மிரட்டல்

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா். தட்டாா்மடம் அருகே வாகைனேரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல் (70). ஆடு மேய்க்கும் தொழிலா... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அதிமுகவினா் வரவேற்பு

தூத்துக்குடி, அக். 20: தூத்துக்குடி விமான நிலையத்தில் எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு, அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை உற்சாக வரவேற்பளித்தனா். திருநெல்வேலி மா... மேலும் பார்க்க

ஆழ்வாா்திருநகரியில் கலைஞா் நூற்றாண்டு நூலகம் திறப்பு

ஆழ்வாா்திருநகரியில் கலைஞா் நூற்றாண்டு நூலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தாா். திமுக இளைஞரணி சாா்பில், ‘முத்தமிழ் அறிஞா் கலைஞா் நூற்றாண்டு நூலகம்’ என்ற ப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு

புரட்டாசி மாதம் முடிந்ததையடுத்து, தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் சனிக்கிழமை மீன்கள் விலை உயா்ந்ததால், மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா். தசரா திருவிழாவை முன்னிட்டு, குலசேகர... மேலும் பார்க்க