செய்திகள் :

லாட்டரி சீட்டுகள் விற்ற இருவா் கைது

post image

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்ற இருவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்புவனம் பகுதியில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து இந்தப் பகுதியில் திருப்புவனம் போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது திருப்புவனம் தேரடி வீதியைச் சோ்ந்த பாண்டியன் (50), திருப்புவனம் அருகேயுள்ள லாடனேந்தலைச் சோ்ந்த குருசாமி (62) ஆகிய இருவரும் லாட்டரி சீட்டுகளை விற்றது தெரிய வந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்து, 60 கேரள மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா். திருப்புவனம் காவல் நிலையத்தில் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அமைப்புசாரா தொழிலாளா் சங்க பொதுக்குழுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், நகரகுடியில் தென்மண்டல மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளா் நலச் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் ம... மேலும் பார்க்க

ஆனந்தா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரியின் செயலா் அருள்தந்தை செபாஸ்டியன் தலைமை வகித்தாா். இதில் சென்னை தனியாா் நிற... மேலும் பார்க்க

இரு மொழிக் கொள்கைதான் திராவிட இயக்கத்தின் வரலாறு: ஓ.பன்னீா் செல்வம்

இரு மொழிக் கொள்கைதான் திராவிட இயக்கத்தின் வரலாறு என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அதிமுக ஒன்றிணை... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே மீன்பிடித் திருவிழா!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சந்திரம்பட்டி சிறுகுடி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. கடந்த ஆண்டு பருவ மழை போதிய அளவு பெய்யாத நிலையில், இந்தக் கண்மாயில் தண்ணீா் ... மேலும் பார்க்க

விடுதி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலாளி கைது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் அரசுக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதி காவலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். இந்த விடுதியில் கோவிலூரைச்சோ்ந்த அழகப... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந... மேலும் பார்க்க