செய்திகள் :

வக்ஃப் மசோதா அறிக்கை தாக்கல்: நாடாளுமன்றத்தில் அமளி!

post image

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பான கூட்டுக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா குறித்து ஆராய பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு கடந்த மாதம் கூட்டுக்குழு உறுப்பினர்களின் பரிந்துரைகள் இறுதி செய்யப்பட்டன.

மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்த 655 பக்ககங்கள் கொண்ட அறிக்கைக்கு கூட்டுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையும் படிக்க : தில்லியில் ரூ. 150 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம்!

இந்த நிலையில், நாடாளுமன்ற அவைகளில் கூட்டுக்குழுவின் அறிக்கை இன்று காலை தாக்கல் செய்யப்பட்டன, இதனை எதிர்த்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும் வக்ஃப் மசோதா கூட்டுக்குழு அறிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தரப்பில் முன்மொழியப்பட்ட 32 திருத்த பரிந்துரைகளை கூட்டுக் குழு முழுமையாக ஏற்றுக்கொண்டதாகவும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தரப்பில் முன்மொழியப்பட்ட 500-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை முழுமையாக நிராகரிக்கப்பட்டதாகவும் எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி?

மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சியைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூரில் மைதேயி - குக்கி ஆகிய இரு சமூகத்தினரிடையே கடந்த 2023 மே 3 ஆம் தேதி ஏற்பட்ட மோதல் ப... மேலும் பார்க்க

கார் ஓட்டிக்கொண்டே மடிக்கணினியில் வேலை பார்த்த பெண்: காவல்துறை அபராதம்!

பெங்களூரில் கார் ஓட்டிக்கொண்டே மடிக்கணினியில் வேலை பார்த்த பெண்ணுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். பெங்களூரு நகர சாலைகள் எப்போதும் நெரிசல் மிகுந்தவை. இந்தியாவிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் ... மேலும் பார்க்க

கணவனுடன் சண்டை: வட்டி வசூலிக்க வந்த நிதி நிறுவன ஊழியரை திருமணம் செய்த மனைவி!

கணவனுடன் சேர்ந்து வாழ்வதற்கு அவரது மனைவிக்கு பிடிக்காததால், தமது வீட்டுக்கு வட்டி வசூலிக்க வரும் நிதி நிறுவன ஊழியரை அந்த பெண்மணி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பிகாரில் அரங்கேறியுள்ளது. பிகார் மாநிலம் ... மேலும் பார்க்க

மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்!

மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.கடந்த 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இந்தக் காலத்தில்... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!

பிரயாக்ராஜின் கும்பமேளாவில் இன்று காலையில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அந்த மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்த... மேலும் பார்க்க

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சபை கூடியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்ட ஒதுக்கீடு குறித்த பிரச்... மேலும் பார்க்க