செய்திகள் :

திரிவேணி சங்கமத்தில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!

post image

பிரயாக்ராஜின் கும்பமேளாவில் இன்று காலையில் 14.7 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அந்த மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மகா சிவராத்திரி நாளான பிப். 26 வரை 45 நாள்களுக்கு நடைபெறும் இந்நிகழ்வில் மாகி பௌா்ணமி உள்ளிட்ட 6 நாள்களில் புனித நீராடுவது சிறப்புக்குரியதாகும்.

இந்த நிலையில், இன்று காலை கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் புனித சங்கமத்தில் 14.7 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். அவர்களில் 5 லட்சம் பேர் கல்பவாசிகள் ஆவர். 9,79 லட்சம் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.

பிப்ரவரி 12 ஆம் தேதி நிலவரப்படி, திரிவேணி சங்கமத்தில் நீராடிய மொத்த பக்தர்களின் எண்ணிக்கை 48 கோடியைத் தாண்டியுள்ளது, இது இந்த பிரமாண்டமான நிகழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக உள்ளது.

இதற்கிடையில், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், அமைச்சர்கள் குழு, சட்டப்பேரவை தலைவர், ஆளுநர், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் இன்று புனித நீராட உள்ளனர்.

பௌஷ பௌர்ணமியன்று தொடங்கிய மஹாகும்பமேளா உலகின் மிகப்பெரிய ஆன்மீக மற்றும் கலாசாரக் கூட்டமாகும், இது உலகம் முடிவதிலுமிருந்து பக்தர்களை ஈர்க்கிறது. இந்த பிரமாண்டமான நிகழ்வு பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை தொடரும்.

கார் ஓட்டிக்கொண்டே மடிக்கணினியில் வேலை பார்த்த பெண்: காவல்துறை அபராதம்!

பெங்களூரில் கார் ஓட்டிக்கொண்டே மடிக்கணினியில் வேலை பார்த்த பெண்ணுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். பெங்களூரு நகர சாலைகள் எப்போதும் நெரிசல் மிகுந்தவை. இந்தியாவிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் ... மேலும் பார்க்க

கணவனுடன் சண்டை: வட்டி வசூலிக்க வந்த நிதி நிறுவன ஊழியரை திருமணம் செய்த மனைவி!

கணவனுடன் சேர்ந்து வாழ்வதற்கு அவரது மனைவிக்கு பிடிக்காததால், தமது வீட்டுக்கு வட்டி வசூலிக்க வரும் நிதி நிறுவன ஊழியரை அந்த பெண்மணி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பிகாரில் அரங்கேறியுள்ளது. பிகார் மாநிலம் ... மேலும் பார்க்க

மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்!

மக்களவையில் புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.கடந்த 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இந்தக் காலத்தில்... மேலும் பார்க்க

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சபை கூடியதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்ட ஒதுக்கீடு குறித்த பிரச்... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா அறிக்கை தாக்கல்: நாடாளுமன்றத்தில் அமளி!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பான கூட்டுக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்!

கேரள கடலோர மற்றும் வனப்பகுதிகளைச் சுற்றியுள்ள சமூகங்களை பாதுகாக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.... மேலும் பார்க்க