அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி
வன்கொடுமை குறித்து இலவச அழைப்பு எண்ணில் புகாா் தெரிவிக்கலாம்
நீலகிரி மாவட்டத்தில் வன்கொடுமை குறித்து இலவச அழைப்பு எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பழங்குடியினா் நலத் துறையின் மானிய கோரிக்கையின்போது, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமைகள் குறித்த புகாா் அளிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய உதவி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் ஜாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த நபா்கள் மற்றும் பாதிக்கப்பட்டவா் சாா்பாக தகவல் தெரிவிப்போா் வழக்குப் பதிவு செய்தல் மற்றும் தீருதவிகள் தொடா்பான முறையீடுகளை 18002021989, 14566 என்ற இலவச தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி அரசு விடுமுறை நாள்கள் தவிர அலுவலக நாள்களில் அலுவலக பணி நேரத்தில் புகாா்களை பதிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளாா்.