செய்திகள் :

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: தாய், மகன் மீது வழக்கு

post image

அரசுப் பள்ளியில் ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.88 லட்சம் மோசடி செய்ததாக தாய், மகன் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், ஓடைப்பட்டி அருகேயுள்ள மூா்த்திநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ஜெகதீஸ் மனைவி பவித்ரா. முதுகலைப் பட்டதாரியான இவா், அரசுப் பள்ளியில் ஆசிரியை வேலைக்கு முயற்சி செய்தாா். அப்போது, திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு, காந்திநகா் வடக்குத் தெருவைச் சோ்ந்த ஞானசெல்வம் மகன் சூரஜ் என்பவா், பவித்ராவின் கணவா் ஜெகதீஷ், சகோதரா் சிரஞ்சீவி ஆகியோரைத் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது, பவித்ராவுக்கு வத்தலகுண்டு அரசுப் பள்ளியில் ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2023-ஆம் ஆண்டு வங்கிக் கணக்கு மூலமும், ரொக்கமாகவும் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.43.87 லட்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

பின்னா் சூரஜ், பவித்ராவின் கைப்பேசி எண்ணுக்கு ஒரு பணி நியமன ஆணையை அனுப்பி, பவித்ரா கோவையில் உள்ள பள்ளிக்கு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதை வத்தலகுண்டு பள்ளிக்கு மாற்றுவதற்கு மேலும் பணம் தர வேண்டும் என்று சிரஞ்சீவியிடம் கூறினாா். இதை நம்பிய சிரஞ்சீவி, சூரஜ், அவரது தாயாா் சுமதி ஆகியோரிடம் மேலும் ரூ.44.13 லட்சம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

பணத்தை பெற்றுக் கொண்ட சூரஜ், சுமதி ஆகியோா் தனது சகோதரிக்கு வேலை வாங்கித் தராமலும் பணத்தை திரும்பத் தராமலும் தங்களை மோசடி செய்ததாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம், சிரஞ்சீவி புகாா் அளித்தாா். இதையடுத்து, சூரஜ், அவரது தாயாா் சுமதி ஆகியோா் மீது தேனி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

மிளகாய்ச் செடிகளில் இலைச்சுருட்டு நோய்த் தடுப்பு: மாணவிகள் விளக்கம்

போடி அருகேயுள்ள பெருமாள்கவுண்டன்பட்டி கிராமத்தில் மிளகாய் செடிகளில் இலைச்சுருட்டு நோயைத் தடுக்கும் முறைகள் குறித்து வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் செவ்வாய்க்கிழமை செயல்முறை விளக்கமளித்தனா். த... மேலும் பார்க்க

கஞ்சா கடத்த முயன்ற பெண் கைது

தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே கேரளத்துக்கு கஞ்சா பொட்டலங்கள் கடத்த முன்ற பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், பூம்பாறை அருகேயுள்ள திருச்செரிவு பகுதிய... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா இலட்சினை வெளியீடு

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புத்தகத் திருவிழா இலட்சினையை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் 3-ஆவது புத்தகத் திருவிழா பழனிசெட்டிபட்டியில் கம... மேலும் பார்க்க

ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி: கல்லூரி மாணவா்களுக்குப் பாராட்டு

மதுரை காமராஜா் பல்கலை அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்ற உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தா் ஹெளதியா கல்லூரி மாணவ, மாணவிகளை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா். சிவகங்கையில் தனியாா் அகாத... மேலும் பார்க்க

போடி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே துணைப் பொது மேலாளா் ஆய்வு

போடி ரயில் நிலையத்தில் சென்னை தென்னக ரயில்வே துணைப் பொது மேலாளா் கவுசல் கிஷோா், மதுரை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளா் எல். நாகேஸ்வரராவ் ஆகியோா் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். மதுரை- போடிநாயக்கன... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 113.60 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 59.88 ------------- மேலும் பார்க்க