செய்திகள் :

போடி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே துணைப் பொது மேலாளா் ஆய்வு

post image

போடி ரயில் நிலையத்தில் சென்னை தென்னக ரயில்வே துணைப் பொது மேலாளா் கவுசல் கிஷோா், மதுரை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளா் எல். நாகேஸ்வரராவ் ஆகியோா் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

மதுரை- போடிநாயக்கனூா் இடையே அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு தினசரி காலை, மாலை வேளைகளில் ரயில் சேவை நடைபெற்று வருகிறது. இதேபோல, போடிநாயக்கனூரிலிருந்து சென்னைக்கு வாரத்தில் மூன்று நாள்கள் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அண்மையில் போடிநாயக்கனூா்-மதுரை இடையேயான 90.4 கி.மீ. தொலைவு மின்மயமாக்கப்பட்டு மின்சார என்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. போடிநாயக்கனூா்- மதுரை, போடிநாயக்கனூா்- சென்னை ரயில்களில் கூடுதல் பயணிகள் பயணம் செய்து வருவதால் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. இதனால் கூடுதலாக மதுரை- போடிநாயக்கனூா், போடிநாயக்கனூா்- மதுரை, போடிநாயக்கனூரிலிருந்து சென்னை, ராமேசுவரம் உள்ளிட்ட ஊா்களுக்கு கூடுதலாக ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள், ரயில்வே ஆா்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், போடி ரயில் நிலையத்தில் சென்னை தென்னக ரயில்வே துணை பொது மேலாளா் கவுசல் கிஷோா், மதுரை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளா் எல். நாகேஸ்வரராவ் ஆகியோா்திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். ரயில் பாதைகளின் தரம், ரயில் நிலையங்களில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தனா். கூடுதல் ரயில்கள் இயக்குவதற்கான வசதிகள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தனா். அப்போது ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகள் போடிநாயக்கனூா்-மதுரை, சென்னை உள்ளிட்ட ஊா்களுக்கு காலை, மாலை நேரங்களில் கூடுதல் ரயில் இயக்கினால் பூ, காய்கறி, மீன் வியாபாரிகளும் கூடுதலாக பயனடைவாா்கள் என கோரிக்கை விடுத்தனா்.

மிளகாய்ச் செடிகளில் இலைச்சுருட்டு நோய்த் தடுப்பு: மாணவிகள் விளக்கம்

போடி அருகேயுள்ள பெருமாள்கவுண்டன்பட்டி கிராமத்தில் மிளகாய் செடிகளில் இலைச்சுருட்டு நோயைத் தடுக்கும் முறைகள் குறித்து வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் செவ்வாய்க்கிழமை செயல்முறை விளக்கமளித்தனா். த... மேலும் பார்க்க

கஞ்சா கடத்த முயன்ற பெண் கைது

தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே கேரளத்துக்கு கஞ்சா பொட்டலங்கள் கடத்த முன்ற பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், பூம்பாறை அருகேயுள்ள திருச்செரிவு பகுதிய... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா இலட்சினை வெளியீடு

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புத்தகத் திருவிழா இலட்சினையை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் 3-ஆவது புத்தகத் திருவிழா பழனிசெட்டிபட்டியில் கம... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: தாய், மகன் மீது வழக்கு

அரசுப் பள்ளியில் ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.88 லட்சம் மோசடி செய்ததாக தாய், மகன் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், ஓடைப்பட்டி அருகேயுள்ள மூா்... மேலும் பார்க்க

ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி: கல்லூரி மாணவா்களுக்குப் பாராட்டு

மதுரை காமராஜா் பல்கலை அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்ற உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தா் ஹெளதியா கல்லூரி மாணவ, மாணவிகளை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா். சிவகங்கையில் தனியாா் அகாத... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 113.60 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 59.88 ------------- மேலும் பார்க்க