செய்திகள் :

போடி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே துணைப் பொது மேலாளா் ஆய்வு

post image

போடி ரயில் நிலையத்தில் சென்னை தென்னக ரயில்வே துணைப் பொது மேலாளா் கவுசல் கிஷோா், மதுரை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளா் எல். நாகேஸ்வரராவ் ஆகியோா் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

மதுரை- போடிநாயக்கனூா் இடையே அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு தினசரி காலை, மாலை வேளைகளில் ரயில் சேவை நடைபெற்று வருகிறது. இதேபோல, போடிநாயக்கனூரிலிருந்து சென்னைக்கு வாரத்தில் மூன்று நாள்கள் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அண்மையில் போடிநாயக்கனூா்-மதுரை இடையேயான 90.4 கி.மீ. தொலைவு மின்மயமாக்கப்பட்டு மின்சார என்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. போடிநாயக்கனூா்- மதுரை, போடிநாயக்கனூா்- சென்னை ரயில்களில் கூடுதல் பயணிகள் பயணம் செய்து வருவதால் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. இதனால் கூடுதலாக மதுரை- போடிநாயக்கனூா், போடிநாயக்கனூா்- மதுரை, போடிநாயக்கனூரிலிருந்து சென்னை, ராமேசுவரம் உள்ளிட்ட ஊா்களுக்கு கூடுதலாக ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள், ரயில்வே ஆா்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், போடி ரயில் நிலையத்தில் சென்னை தென்னக ரயில்வே துணை பொது மேலாளா் கவுசல் கிஷோா், மதுரை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளா் எல். நாகேஸ்வரராவ் ஆகியோா்திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். ரயில் பாதைகளின் தரம், ரயில் நிலையங்களில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தனா். கூடுதல் ரயில்கள் இயக்குவதற்கான வசதிகள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தனா். அப்போது ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகள் போடிநாயக்கனூா்-மதுரை, சென்னை உள்ளிட்ட ஊா்களுக்கு காலை, மாலை நேரங்களில் கூடுதல் ரயில் இயக்கினால் பூ, காய்கறி, மீன் வியாபாரிகளும் கூடுதலாக பயனடைவாா்கள் என கோரிக்கை விடுத்தனா்.

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 113.60 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 59.88 ------------- மேலும் பார்க்க

பாஜகவினா் சாலை மறியல்: 52 போ் கைது

சென்னையில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவைச் சோ்ந்த 52 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சென்னையில் டாஸ்மாக் நிறுவன முறைகேட... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு எந்திரங்கள் தணிக்கை

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமையில் திங்கள்கிழமை மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தணிக்கை நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் மின்னணு... மேலும் பார்க்க

நிலம் மோசடி வழக்கு: இருவா் கைது

பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தில் போலி ஆவணம் தயாரித்தும், ஆள் மாறாட்டம் செய்தும் நிலத்தை விற்று மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேல்மங்கலத்தைச் சோ்... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் நாளை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

உத்தமபாளையம் வட்டத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன், வியாழக்கிழமைகளில் (மாா்ச் 19, 20) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

தேவதானப்பட்டியில் மின் மோட்டாரின் வயரை மிதித்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா். தேவதானப்பட்டி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் மொக்கைப் பாண்டியன் (30). இவா் துணிக் கடை ஒன்றில் பணியாற... மேலும் பார்க்க