செய்திகள் :

மிளகாய்ச் செடிகளில் இலைச்சுருட்டு நோய்த் தடுப்பு: மாணவிகள் விளக்கம்

post image

போடி அருகேயுள்ள பெருமாள்கவுண்டன்பட்டி கிராமத்தில் மிளகாய் செடிகளில் இலைச்சுருட்டு நோயைத் தடுக்கும் முறைகள் குறித்து வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் செவ்வாய்க்கிழமை செயல்முறை விளக்கமளித்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரம் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் ஹரிபிரியா, ஆா்த்தி, ஆரியா, மாளவிகா, கௌரி, சௌமியா, கிருஷ்ண நந்தினி, தாமினி அரசி, சங்கீதா, பிரியங்கா, நவீனா, சுதாஸ்ரீ, சன்மதி ஆகியோா் போடி பகுதியில் கிராமத் தங்கல் திட்டத்தின் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனா்.

இந்த மாணவிகள் போடி அருகேயுள்ள பெருமாள்கவுண்டன்பட்டி கிராமத்தில் மிளகாய்ச் செடிகள் பயிா் செய்யப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்தனா்.

அப்போது மிளகாய்ச் செடிகளில் இலைச்சுருட்டு நோய் தாக்குதல் இருப்பது தெரியவந்தது. பின்னா் மிளகாய்ச் செடிகளில் இலைச்சுருட்டு நோய் தாக்காமலிருக்கவும், நோய் தாக்கியபின்னா் செய்ய வேண்டிய தடுப்பு முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினா். இதில் பெருமாள்கவுண்டன்பட்டி உள்பட சுற்றுவட்டார கிராம விவசாயிகள் பங்கேற்று மாணவிகளிடம் தங்களின் சந்தேகங்களை கேட்டறிந்து விளக்கம் பெற்றனா்.

கஞ்சா கடத்த முயன்ற பெண் கைது

தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே கேரளத்துக்கு கஞ்சா பொட்டலங்கள் கடத்த முன்ற பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், பூம்பாறை அருகேயுள்ள திருச்செரிவு பகுதிய... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா இலட்சினை வெளியீடு

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புத்தகத் திருவிழா இலட்சினையை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் 3-ஆவது புத்தகத் திருவிழா பழனிசெட்டிபட்டியில் கம... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: தாய், மகன் மீது வழக்கு

அரசுப் பள்ளியில் ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ.88 லட்சம் மோசடி செய்ததாக தாய், மகன் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், ஓடைப்பட்டி அருகேயுள்ள மூா்... மேலும் பார்க்க

ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி: கல்லூரி மாணவா்களுக்குப் பாராட்டு

மதுரை காமராஜா் பல்கலை அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்ற உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தா் ஹெளதியா கல்லூரி மாணவ, மாணவிகளை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா். சிவகங்கையில் தனியாா் அகாத... மேலும் பார்க்க

போடி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே துணைப் பொது மேலாளா் ஆய்வு

போடி ரயில் நிலையத்தில் சென்னை தென்னக ரயில்வே துணைப் பொது மேலாளா் கவுசல் கிஷோா், மதுரை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளா் எல். நாகேஸ்வரராவ் ஆகியோா் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். மதுரை- போடிநாயக்கன... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 113.60 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 59.88 ------------- மேலும் பார்க்க