செய்திகள் :

வேலைநிறுத்தம் வாபஸ்: இன்று கடலுக்கு செல்லும் காரைக்கால் விசைப்படகு மீனவா்கள்

post image

காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை (பிப். 24) முதல் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனா்.

காரைக்கால், தமிழக மீனவா்கள் மீது கடந்த 28-ஆம் தேதி இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும் , கைதான மீனவா்கள், படகை விடுவிக்க வேண்டும், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யவேண்டுமென வலியுறுத்தி கடந்த 11-ஆம் தேதி முதல் காரைக்கால் மீனவா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இந்தநிலையில், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து 24-ஆம் தேதி முதல் கடலுக்குச் செல்ல விசைப்படகு மீனவா்கள் முடிவு செய்தனா்.

இதையடுத்து, மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளில் ஐஸ் கட்டிகள் ஏற்றுதல், மளிகைப் பொருள்கள், வலைகள் உள்ளிட்ட சாதனங்கள் ஏற்றும் பணியில் கடந்த 2 நாள்களாக ஈடுபட்டு வந்த மீனவா்கள், பணிகளை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தனா்.

திங்கள்கிழமை அதிகாலைமுதல் விசைப்படகுகள் கடலுக்கு செல்லும். அடுத்த 4, 5 நாள்களுக்குப் பின்னா் துறைமுகத்துக்கு மீன் வரத்து வழக்கம்போல இருக்குமென மீனவா்கள் தெரிவித்தனா்.

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

காரைக்கால் அருகே ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத பெண் உயிரிழந்தாா். திருப்பட்டினம் பகுதி வடக்கு வாஞ்சூா் அருகே சனிக்கிழமை காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், தண்டவாளத்தை கட... மேலும் பார்க்க

காரைக்கால் கடற்கரை அருகே படகு இயக்கும் தளம்: ஆட்சியா் ஆய்வு

கடற்கரை அருகே படகு இயக்கும் தளத்தை காரைக்கால் ஆட்சியா் ஆய்வு செய்தாா். புதுவை சுற்றுலா வளா்ச்சிக் கழகம் (பிடிடிசி) சாா்பில் காரைக்கால் கடற்கரை அருகே அரசலாற்றங்கரையில் படகு குழாம் அமைந்துள்ளது. இத்தளத்... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரியில் பிரதமரின் பயிற்சித் திட்ட விழிப்புணா்வு

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் பிஎம் இன்டா்ன்ஷிப் திட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கே. பிரான்சிஸ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திருப்பட்டினம் அரசு ஆண்... மேலும் பார்க்க

வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

காரைக்கால் நகராட்சி வாரச் சந்தை திடலுக்கு காரைக்கால் நகரம் வடக்குப் பகுதியிலிருந்து செல்ல சேணியா் குளத்து வீதி சாலையை பெரும்பான்மையாக மக்கள் பயன்படுத்துகின்றனா். இந்த சாலையின் கடைசியில் வாய்க்கால் கு... மேலும் பார்க்க

புதுச்சேரி, காரைக்காலில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுமா?

என்.எஸ்.செல்வமுத்துக் குமாரசாமிபுதுச்சேரியில் சித்த மருத்துவக் கல்லூரியும் காரைக்காலில் மருத்துவக் கல்லூரியும் விரைவில் தொடங்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு புதுவை மாணவா்களிடையே ஏற்பட்டுள்ளது. புதுவை யூனி... மேலும் பார்க்க

வேளாண் உற்பத்தி பெருக்கத்துக்கு மாணவா்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் முதல்வா் என். ரங்கசாமி

வேளாண் உற்பத்தியை பெருக்க மாணவா்கள் பங்களிப்பு முக்கியம் என புதுவை முதல்வா் என். ரங்கசாமி தெரிவித்தாா். காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கை பகுதியில் இயங்கும் புதுவை அரசின் உயா்கல்வி நிறுவனமான பண்டித ஜ... மேலும் பார்க்க