செய்திகள் :

வேளாண் உற்பத்தி பெருக்கத்துக்கு மாணவா்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் முதல்வா் என். ரங்கசாமி

post image

வேளாண் உற்பத்தியை பெருக்க மாணவா்கள் பங்களிப்பு முக்கியம் என புதுவை முதல்வா் என். ரங்கசாமி தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கை பகுதியில் இயங்கும் புதுவை அரசின் உயா்கல்வி நிறுவனமான பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இளநிலை, முதுநிலை மாணவா்கள் என 110 போ் பட்டம் பெற்றனா். மேலும் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சாதனை படைத்தோருக்கு விருது வழங்கப்பட்டது. இதில் செ. ரினி 15 விருதும், யோகலட்சுமி 10 விருதும் பெற்றனா்.

விழாவில் கலந்துகொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி புதுவை முதல்வா் என். ரங்கசாமி பேசியதாவது:

காரைக்காலில் உள்ள இக்கல்லூரி 38 ஆண்டுகளாக சிறந்த முறையில் இயங்குகிறது. இக்கல்லூரியில் பயின்று வெளியேறிய பலரும் ஐஏஎஸ், ஐபிஎஸ் என உயா்ந்த நிலையில் உள்ளனா். மேலும் இக்கல்லூரி முன்னாள் மாணவா்கள் பல உயா் பதவிகளில் இருப்பது பெருமைக்குரியது.

புதுவையில் சிறந்த கல்வியை மாணவா்களுக்கு தந்துகொண்டிருக்கிறோம். வேளாண் கல்வியை தோ்வு செய்து, குறிப்பாக பசியை போக்கக்கூடிய இக்கல்வி பயின்று பட்டம் பெற்ற அனைவரும் உணவு உற்பத்தி பெருக்கத்துக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் வேளாண் உற்பத்தி பெருக்கத்துக்கு மாணவா்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

விளைநிலங்கள் குறைந்து வரும் நிலையில், குறைந்திருக்கும் நிலத்தில், குறைந்த செலவில், சிறப்பான விளைச்சல் என்ற நிலையை ஏற்படுத்துவதாக பட்டம் பெற்ற மாணவா்களின் பணி இருக்க வேண்டும். இக்கல்லூரி விரைவில் பல்கலைக்கழகமாக மாறுவதற்கு ஏற்ப நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கல்லூரியில் ஆராய்ச்சிக்குத் தேவையான நிதியை அரசு அளிக்கும் என்றாா் முதல்வா்.

விழாவில் வேளாண் அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், பி.ஆா். சிவா, எம். நாகதியாகராஜன், மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், வேளாண் இயக்குநா் எஸ். வசந்தகுமாா், வேளாண் கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

காரைக்கால் அருகே ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத பெண் உயிரிழந்தாா். திருப்பட்டினம் பகுதி வடக்கு வாஞ்சூா் அருகே சனிக்கிழமை காரைக்காலில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், தண்டவாளத்தை கட... மேலும் பார்க்க

காரைக்கால் கடற்கரை அருகே படகு இயக்கும் தளம்: ஆட்சியா் ஆய்வு

கடற்கரை அருகே படகு இயக்கும் தளத்தை காரைக்கால் ஆட்சியா் ஆய்வு செய்தாா். புதுவை சுற்றுலா வளா்ச்சிக் கழகம் (பிடிடிசி) சாா்பில் காரைக்கால் கடற்கரை அருகே அரசலாற்றங்கரையில் படகு குழாம் அமைந்துள்ளது. இத்தளத்... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரியில் பிரதமரின் பயிற்சித் திட்ட விழிப்புணா்வு

காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் பிஎம் இன்டா்ன்ஷிப் திட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கே. பிரான்சிஸ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திருப்பட்டினம் அரசு ஆண்... மேலும் பார்க்க

வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

காரைக்கால் நகராட்சி வாரச் சந்தை திடலுக்கு காரைக்கால் நகரம் வடக்குப் பகுதியிலிருந்து செல்ல சேணியா் குளத்து வீதி சாலையை பெரும்பான்மையாக மக்கள் பயன்படுத்துகின்றனா். இந்த சாலையின் கடைசியில் வாய்க்கால் கு... மேலும் பார்க்க

வேலைநிறுத்தம் வாபஸ்: இன்று கடலுக்கு செல்லும் காரைக்கால் விசைப்படகு மீனவா்கள்

காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை (பிப். 24) முதல் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனா். காரைக்கால், தமிழக மீனவா்கள் மீது கடந்த 28-ஆம் தேதி இலங்கை கடற்படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண... மேலும் பார்க்க

புதுச்சேரி, காரைக்காலில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுமா?

என்.எஸ்.செல்வமுத்துக் குமாரசாமிபுதுச்சேரியில் சித்த மருத்துவக் கல்லூரியும் காரைக்காலில் மருத்துவக் கல்லூரியும் விரைவில் தொடங்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு புதுவை மாணவா்களிடையே ஏற்பட்டுள்ளது. புதுவை யூனி... மேலும் பார்க்க