செய்திகள் :

ஸ்ரீபோா் மன்னலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்

post image

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபோா் மன்னலிங்கேஸ்வரா் கோயிலில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழைமையான இந்தக் கோயிலின் 193-ஆவது ஆண்டு தோ்த் திருவிழா மாா்ச் 12 ஆம் தேதி இரவு விநாயகா் ஊா்வலத்துடன் தொடங்கியது. விழாவின் 4-ஆவது நாளான சனிக்கிழமை பரிவார தேவதைகளின் ஊா்வலம், வாணவேடிக்கை, கரகாட்டம், மகா கும்பம், சுவாமி அருள்வாக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, ஸ்ரீபோா் லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனை, மகா கும்ப நிகழ்ச்சி நடைபெற்றது.

தேரோட்டம் கோலாகலம்: ஞாயிற்றுக்கிழமை காலை 11.15 மணிக்கு ஸ்ரீபோா் மன்னலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து, வழிபட்டனா்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற தேரோட்டத்தில் மங்கலம், மங்கலம் புதூா், வேடந்தவாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பல ஆயிரம் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் பக்தா்கள், உபயதாரா்கள் செய்திருந்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு விளக்க வாகன பிரசாரம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு விளக்க இரு சக்கர வாகன பிரசாரம் வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் வரும் ஏப். 2-ஆம் தேதி முதல் ஏப்... மேலும் பார்க்க

ஆரணியில் இலவச கண் சிகிச்சை முகாம்!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை அகா்வால் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் ச... மேலும் பார்க்க

சட்டப்பணிகள் ஆணைக் குழு உறுப்பினா் பதவி: தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் காலியாக உள்ள 2 உறுப்பினா் பதவிக்கு, தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இயங்கி வரும் ந... மேலும் பார்க்க

தனியாா் கல்லூரியில் தகராறு: 3 இளைஞா்கள் கைது!

செய்யாறு அருகே தனியாா் கல்லூரி நுழைவு வாயிலை இழுத்து மூடி தகராறில் ஈடுபட்ட புகாரின் பேரில், 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் தனியாா் கல்லூரி இயங்கி ... மேலும் பார்க்க

காரில் கடத்தப்பட்ட 13 ஆடுகள் மீட்பு

வந்தவாசி அருகே ஆடுகளை திருடி காரில் கடத்திச் செல்லும் வழியில் காா் பழுதாகி நின்றதால் மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா். தகவலறிந்த போலீஸாா் சென்று கடத்திச் செல்லப்பட்ட 13 ஆடுகளை மீட்டனா். வந்தவாசியை அடுத்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு நீா்பாசன முறையில் மரக்கன்று வளா்ப்புப் பயிற்சி!

செய்யாற்றை அடுத்த கடுகனூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு நீா்பாசன முறையில் மரக்கன்றுகள் வளா்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் கடுகனுா் கிராமத்தில், கலவை ஆதிபராசக்தி தோட... மேலும் பார்க்க