செய்திகள் :

ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

post image

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 6 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. தில்லி மற்றும் மும்பை அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதையும் படிக்க: முக்கிய வீரரின்றி இந்தியாவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதன் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதன் இரண்டாவது போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நாளை சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் பெங்களூரு அணி உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் எல்லிஸ் பெரி, ராகவி பிஸ்ட், ரிச்சா கோஷ் மற்றும் கனிகா அஹுஜா ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர்.

இதையும் படிக்க:பாபர் அசாம் அரைசதத்தினால் தோல்வியடைந்த பாகிஸ்தான்..! முன்னாள் கேப்டன் கடும் விமர்சனம்!

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பாகிஸ்தானில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இல்லை: பாக். முன்னாள் வீரர்

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்க... மேலும் பார்க்க

மனைவியைப் பிரிந்தார் சஹால்..! ரூ.60 கோடி ஜீவனாம்சம் கேட்டாரா தனஸ்ரீ வர்மா?

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர முறையில் விவகாரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர... மேலும் பார்க்க

ரியான் ரிக்கல்டான் சதம், மூவர் அரைசதம்; ஆப்கானிஸ்தானுக்கு 316 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் குவித்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொட... மேலும் பார்க்க

மீண்டும் இந்திய அணியின் சீருடையில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங்!

10 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட இடைவெளிக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் இருவரும் இந்திய அணியின் சீருடையில் களமிறங்கவுள்ளனர்.சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 22... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: மீண்டும் அணியில் இணைந்த இங்கிலாந்து இளம் விக்கெட் கீப்பர்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து இளம்வீரர் ஜேமி ஸ்மித்துக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொ... மேலும் பார்க்க