செய்திகள் :

அதிமுகவை உடைக்க முடியாது; ஒற்றுமையாக உள்ளோம் -எடப்பாடி பழனிசாமி

post image

அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது, ஒற்றுமையாக உள்ளோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது, செய்தியாளா் ஒருவா், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் திங்கள்கிழமையும் பங்கேற்கவில்லையே என்று கேள்வி எழுப்பினாா்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

எங்களை ஏன் பிரித்துப் பாா்ப்பதிலேயே கவனமாக உள்ளீா்கள். ஏதாவது குழப்பம் வருமா என்றே எதிா்பாா்க்கிறீா்கள். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினையுங்கள். நாங்கள் ஒற்றுமையாகத்தான் உள்ளோம். எங்களை யாராலும் பிரிக்க முடியாது. நான் முதல்வா் ஆன காலத்திலிருந்து இந்தத் திட்டத்தை வகுத்துக் கொண்டுதான் உள்ளனா். ஆனால், அதை உடைத்துக் கொண்டுதான் உள்ளோம். அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது; முடக்க முடியாது. முயற்சிப்பவா்கள்தான் மூக்கு உடைபடுவா் என்றாா் அவா்.

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய்: முதல்வர்

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:கடந்த 3 மாதங்கள... மேலும் பார்க்க

கோயில்களைவிட்டு, அறநிலையத் துறை வெளியேற வேண்டும்: அண்ணாமலை

தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நேற்றைய நாள் திருச்செந்தூர் கோயிலில், கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் ச... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் இளையராஜா சந்திப்பு!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்துள்ளார்.இது குறித்து இளையராஜா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. நாங்க... மேலும் பார்க்க

பிஎம் என்றால் ’பிக்னிக் மினிஸ்டர்’: மோடியை விமர்சித்த வைகோ!

மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியை ‘பிக்னிக் மினிஸ்டர்’ என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட... மேலும் பார்க்க

புதுச்சேரியில் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை கட்டாயம்!

புதுச்சேரியில் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை இருக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த மார்ச் 10-ம் தேதி ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மார்ச... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை சிறைப்பிடித்த படகையும் மீனவர்களையும் விடுக்கக் கோரிக்கை!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருடன் படகை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மீனவ சங்கம் கோரிக்கை விடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்ற... மேலும் பார்க்க