செய்திகள் :

அந்தமானில் மோசமான வானிலை: மீண்டும் சென்னை திரும்பிய விமானம்

post image

சென்னை: சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானம், அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னையில் தரையிறங்கியது.

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திலிருந்து திங்கள்கிழமை அதிகாலை 4.40 மணியளவில் அந்தமானுக்கு 162 பயணிகளுடன் ‘இண்டிகோ ஏா்லைன்ஸ்’ விமானம் புறப்பட்டுச் சென்றது.

அந்தமான் விமான வான்வெளியை விமானம் நெருங்கியபோது, அங்கு பலத்த சூறைக்காற்றுடன் மோசமான வானிலை நிலவியது. இதனால் விமானம் அந்தமானில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி இருந்தது. இதுகுறித்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து அந்த விமானத்தை உடனடியாக சென்னைக்கு திருப்பிக்கொண்டு வரும்படி கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் உத்தரவிட்டனா். அதன்பேரில், திங்கள்கிழமை காலை 8 மணியளவில் அந்த விமானம் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

அந்தமானில் வானிலை சீரடைந்தவுடன் மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்பட்டுச் செல்லும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

தொடர் சிகிச்சையில் தயாளு அம்மாள்! மு.க. அழகிரி வருகை!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனைக்கு நேரில் வந்து மு.க.அழகிரி நலம்விசாரித்தார்.வயது முதிா்வு காரணமாக சென்னை கோபாலபுரத்த... மேலும் பார்க்க

தங்கம் விலை ரூ. 560 உயர்வு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 64,080-க்கு விற்பனையாகிறது.தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,940-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520-க்... மேலும் பார்க்க

மீனவர்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இலங்கை கடற்படை நடவடிக்கையால் பாதிக்கபட்டுள்ள மீனவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிவாரணத் தொகையை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் பார்க்க

திருச்செந்தூா் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார நாள் விழா!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 193வது அவதார நாள் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இவ்விழாவை முன்... மேலும் பார்க்க

சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!

சென்னை : தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என்கிற நடைமுறை இன்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. மேலும் பார்க்க

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: "கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை இலங்கை அனுமதிக்கும் வகையில், புதியதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.... மேலும் பார்க்க