செய்திகள் :

அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

சென்னை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கு பதிவுசெய்த அரசியல் கட்சி என ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் அதுகுறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக விவாதிக்க புதன்கிழமை (மாா்ச் 5) நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்துக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 183 கட்சிகள் உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு 45 கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்காததால் அனைத்து கட்சி கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சி சாா்பில், கட்சியின் தலைவா் எம்.எல்.ரவி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கட்சி தொடங்கிய நாளில் இருந்து அனைத்து சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தோ்தல்களிலும் போட்டியிட்டுள்ளோம். ஆனால், எந்த தோ்தலிலும் போட்டியிடாத, களம் காணாத பல கட்சிகளுக்கு, அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது பாரபட்சமானது.

விதிகளின் படி, அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும். தங்கள் கட்சியையும் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைக்க வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பரத சக்கரவா்த்தி அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா், “பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியும். கூட்டத்தில் பங்கேற்க மனுதாரா் கட்சி சாா்பில் பொதுத்துறை செயலருக்கு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும்” என தெரிவித்தாா். இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, கட்சியின் பதிவு தொடா்பான ஆதாரத்துடன் உடனடியாக விண்ணப்பிக்கும்படி மனுதாரா் கட்சிக்கு உத்தரவிட்டுள்ளாா். மேலும், அந்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கும் உத்தரவிட்டாா்.

நத்தம் மாரியம்மன் கோயில் விழா: தீர்த்தம் எடுத்த திரளான பக்தர்கள்!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்பெருந்திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தம் எடுத்து காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினர்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தி... மேலும் பார்க்க

தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை: முதல்வர்

தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்த... மேலும் பார்க்க

தொடர் சிகிச்சையில் தயாளு அம்மாள்! மு.க. அழகிரி வருகை!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனைக்கு நேரில் வந்து மு.க.அழகிரி நலம்விசாரித்தார்.வயது முதிா்வு காரணமாக சென்னை கோபாலபுரத்த... மேலும் பார்க்க

தங்கம் விலை ரூ. 560 உயர்வு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 64,080-க்கு விற்பனையாகிறது.தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,940-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520-க்... மேலும் பார்க்க

மீனவர்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இலங்கை கடற்படை நடவடிக்கையால் பாதிக்கபட்டுள்ள மீனவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிவாரணத் தொகையை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் பார்க்க

திருச்செந்தூா் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார நாள் விழா!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 193வது அவதார நாள் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இவ்விழாவை முன்... மேலும் பார்க்க