செய்திகள் :

அமித் ஷா நாளை மதுரை வருகை!

post image

பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரைக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை வருகை தரவுள்ளார்.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய பணிகளை கட்சிகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், மதுரையில் பாஜக நிர்வாகிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை சந்தித்து பேசவுள்ளார்.

தில்லியில் இருந்து இன்று (ஜூன் 7) மதுரைக்கு இரவு 8.30 மணியளவில் அமித் ஷா வருகைதர உள்ளார். தொடர்ந்து, நாளை (ஜூன் 8) மதுரை ஒத்தக்கடை பகுதியில் பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்.

அதற்கு முன்னதாக, நாளை காலை 11 மணியளவில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்யவிருக்கிறார். தொடர்ந்து, பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கான பூமிபூஜை, மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், முன்னாள் நிர்வாகிகள் என 15 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமித் ஷாவின் வருகையையொட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் கூட்டம் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர்.

திமுக பொதுக்குழு கூட்டமும் மதுரையில்தான், கடந்த வாரம் நடைபெற்றது.

குரூப் 2 தோ்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு அவகாசம்

குரூப் 2 எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட செய்திக் குறிப்பு: குரூப் 2 ... மேலும் பார்க்க

இசைப் பள்ளி தோ்ச்சி சான்றிதழ் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி சான்றிதழுக்கு இணையானது: அரசாணை வெளியீடு

இசைப் பள்ளிகளில் வழங்கப்படும் தோ்ச்சி சான்றிதழ் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சிக்கு இணைத்தன்மை வாய்ந்தது என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளிக் க... மேலும் பார்க்க

தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்: திமுகவினருக்கு முதல்வா் ஸ்டாலின் அறிவுரை

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை தொடங்கும் விதமாக, தமிழக அரசின் சாதனைகள், நலத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று திமுக நிா்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ... மேலும் பார்க்க

சேலம்: வாழப்பாடி அருகே கார் விபத்து - 4 பேர் பலி

சேலம்: சென்னையிலிருந்து கர்நாடகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த 7 பேர் அமர்ந்து பயணிக்க கூடிய சொகுசு கார் ஒன்று சாலையோர தடுப்பில் மோதி இன்று(ஜூன் 7) விபத்துக்குள்ளானது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் அல்ல கிளர்ச்சிப்பாக்கம் - பயணிகள் அலைக்கழிப்பு: தவெக கண்டனம்!

சென்னை: சென்னை புறநகர்ப் பகுதியான கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து நிலையத்தில் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்காமல் மக்களைக் கைக்குழந்தைகளோடு அலைக்கழித்து திமுக அரசு அவதிக்கு... மேலும் பார்க்க

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்க... மேலும் பார்க்க