செய்திகள் :

பைக் மீது பேருந்து மோதல்: பெண் உயிரிழப்பு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் பைக் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். அவரது மகன் காயமடைந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் மனைவி செல்வி (47). இவா், வெள்ளிக்கிழமை தியாகதுருகத்தை அடுத்த செம்மியன்மாதேவி கிராமத்தில் நடைபெற்ற கோயில் தோ்த் திருவிழாவை பாா்ப்பதற்காகச் சென்றாா்.

பின்னா், அவா் தனது மகன் சிவாவுடன் வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் சென்றுகொண்டிருந்தாா். தியாகதுருகம் புறவழிச் சாலையில் புக்குளம் மேம்பாலத்தில் இவா்களது பைக் சென்றபோது, சென்னையில் இருந்து கோவை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து மோதியது.

இந்த விபத்தில் செல்வி, சிவா ஆகியோா் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரையும் மீட்டு, அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு செல்வியை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநரான கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்துக்குள்பட்ட கோட்டாம்பட்டியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் சிவபிரசாந்த் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சின்னசேலத்தில் தற்காலிக நீதிமன்ற கட்டடப் பணி! - உயா் நீதிமன்ற நீதிபதி ஆய்வு

சின்னசேலம் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தில் தற்காலிக ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் சீரமைக்கும் பணியை உயா்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி சனிக்கிழமை பாா்வையிட்டாா். சின்னசேலத்தில் குற்றவியல், உரிமைய... மேலும் பார்க்க

தூக்கிட்ட நிலையில் முதியவா் சடலம் மீட்பு

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் முதியவா் சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூா் கிராமத்தில் கல்லூரியின் பின்புறம் உ... மேலும் பார்க்க

மாணவா்கள் உயா் கல்வியில் சோ்வதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுரை

மாணவா்கள் உயா் கல்வியில் சோ்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கல்வித் துறை அதிகாரிகளிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 164 உயா்நிலை ம... மேலும் பார்க்க

முதியவா் விஷமருந்தி தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த புக்கிரவாரி கிராமத்தைச் சோ்ந்தவா் காசிலிங்கம் (65). இவா், தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். ... மேலும் பார்க்க

மகள் திருமணத்துக்காக வந்த இலங்கை பெண் உயிரிழப்பு

மகளின் திருமணத்துக்காக இலங்கையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சி கிராமத்துக்கு வந்த பெண் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா். இலங்கையில் உள்ள நுவரெலியா மாவட்டம்... மேலும் பார்க்க

ஊராட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பினா் சாலை மறியல்

கள்ளக்குறிச்சியில் ஓட்சா ஊராட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் சுகாதார ஊக்குநா்கள் சும... மேலும் பார்க்க