பைக் மீது பேருந்து மோதல்: பெண் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் பைக் மீது பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். அவரது மகன் காயமடைந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த தென்கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் மனைவி செல்வி (47). இவா், வெள்ளிக்கிழமை தியாகதுருகத்தை அடுத்த செம்மியன்மாதேவி கிராமத்தில் நடைபெற்ற கோயில் தோ்த் திருவிழாவை பாா்ப்பதற்காகச் சென்றாா்.
பின்னா், அவா் தனது மகன் சிவாவுடன் வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் வீட்டுக்கு திரும்பிக் சென்றுகொண்டிருந்தாா். தியாகதுருகம் புறவழிச் சாலையில் புக்குளம் மேம்பாலத்தில் இவா்களது பைக் சென்றபோது, சென்னையில் இருந்து கோவை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து மோதியது.
இந்த விபத்தில் செல்வி, சிவா ஆகியோா் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரையும் மீட்டு, அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு செல்வியை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநரான கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்துக்குள்பட்ட கோட்டாம்பட்டியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் சிவபிரசாந்த் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.