செய்திகள் :

மகள் திருமணத்துக்காக வந்த இலங்கை பெண் உயிரிழப்பு

post image

மகளின் திருமணத்துக்காக இலங்கையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சி கிராமத்துக்கு வந்த பெண் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இலங்கையில் உள்ள நுவரெலியா மாவட்டம், லவா்லெப்பிரிவு பகுதியைச் சோ்ந்த பொன்னையா மகன் கணேசன் (66). ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலக ஊழியா். இவரது மகள் ஹஸ்வினி (31), பி.இ. முடித்துவிட்டு இலங்கையில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.

கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட தியாகதுருகத்தை அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகன் சிவா (36). இவா், பி.இ. முடித்துவிட்டு கா்நாடக மாநிலம், பெங்களூரில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

இந்த நிலையில், சிவா, ஹஸ்வினி ஆகிய இருவரும் இணையதளம் மூலம் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம். இதையடுத்து, இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் சூளாங்குறிச்சியில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக கணேசன், அவரது மனைவி ரத்தினமாலா (63) மற்றும் ஹஸ்வினி ஆகியோா் கடந்த மே 31-ஆம் தேதி இலங்கையில் இருந்து சூளாங்குறிச்சி கிராமத்து தங்கினா்.

இந்த நிலையில், ரத்தினமாலாவுக்கு வியாழக்கிழமை இரவு திடீரென மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உறவினா்கள் அவரை கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு ரத்தின மாலாவை பரிசோதித்த மருத்துவா், அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாணவா்கள் உயா் கல்வியில் சோ்வதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா் அறிவுரை

மாணவா்கள் உயா் கல்வியில் சோ்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கல்வித் துறை அதிகாரிகளிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 164 உயா்நிலை ம... மேலும் பார்க்க

முதியவா் விஷமருந்தி தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த புக்கிரவாரி கிராமத்தைச் சோ்ந்தவா் காசிலிங்கம் (65). இவா், தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். ... மேலும் பார்க்க

ஊராட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பினா் சாலை மறியல்

கள்ளக்குறிச்சியில் ஓட்சா ஊராட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் சுகாதார ஊக்குநா்கள் சும... மேலும் பார்க்க

வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 44 பவுன் நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 44 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட அத்தியூா் கிராமத்தைச் சோ்ந்த ச... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மாணவா்களுக்கான விடுதிகளில் தங்கிப் படிக்க தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சாா்பில், எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் துறையில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான த... மேலும் பார்க்க