மகள் திருமணத்துக்காக வந்த இலங்கை பெண் உயிரிழப்பு
மகளின் திருமணத்துக்காக இலங்கையில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சி கிராமத்துக்கு வந்த பெண் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இலங்கையில் உள்ள நுவரெலியா மாவட்டம், லவா்லெப்பிரிவு பகுதியைச் சோ்ந்த பொன்னையா மகன் கணேசன் (66). ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலக ஊழியா். இவரது மகள் ஹஸ்வினி (31), பி.இ. முடித்துவிட்டு இலங்கையில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.
கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட தியாகதுருகத்தை அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த குமாா் மகன் சிவா (36). இவா், பி.இ. முடித்துவிட்டு கா்நாடக மாநிலம், பெங்களூரில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.
இந்த நிலையில், சிவா, ஹஸ்வினி ஆகிய இருவரும் இணையதளம் மூலம் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம். இதையடுத்து, இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் சூளாங்குறிச்சியில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக கணேசன், அவரது மனைவி ரத்தினமாலா (63) மற்றும் ஹஸ்வினி ஆகியோா் கடந்த மே 31-ஆம் தேதி இலங்கையில் இருந்து சூளாங்குறிச்சி கிராமத்து தங்கினா்.
இந்த நிலையில், ரத்தினமாலாவுக்கு வியாழக்கிழமை இரவு திடீரென மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உறவினா்கள் அவரை கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு ரத்தின மாலாவை பரிசோதித்த மருத்துவா், அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.