முதியவா் விஷமருந்தி தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த புக்கிரவாரி கிராமத்தைச் சோ்ந்தவா் காசிலிங்கம் (65). இவா், தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதேபோல, கடந்த 3-ஆம் தேதி காசிலிங்கம் மது அருந்திவிட்டு வந்ததை அவரது பேரன் குமாா் கண்டித்தாராம். இதனால், மனமுடைந்த காசிலிங்கம் வீட்டில் இருந்த விஷ மருந்தை குடித்து மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசராணை நடத்தி வருகின்றனா்.