செய்திகள் :

அமெரிக்க நூலகத்தில் தீ! போராடும் தீயணைப்புப் படை!

post image

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்திலுள்ள பொது நூலத்தின் வாகன நிறுத்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

டென்னிசி மாகாணத்தின் தலைநகர் நாஷ்வில்லில் அமைந்துள்ள பொது நூலகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இன்று (ஜூன் 10) அதிகாலை 1.15 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழந்துள்ள நிலையில், நூலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், அந்த நூலகத்தில் பரவியுள்ள தீயை அணைக்க அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் போராடி வருகின்றனர். இருப்பினும், இந்தச் சம்பவத்துக்கான காரணம் குறித்து எந்தவொரு செய்தியும் வெளியிடப்படவில்லை.

மேலும், இதுகுறித்து நாஷ்வில் தீயணைப்பு துறையும், இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை.

இதையும் படிக்க: அதிகாலையிலேயே உக்ரைன் நகரங்களைத் தாக்கிய ரஷியா! 2 பேர் பலி!

இந்தியாவுடன் நல்லுறவைத் தொடரவே விருப்பம்: முகமது யூனுஸ்

‘இந்தியாவுடன் நல்லுறவைத் தொடரவே வங்கதேசம் விரும்புகிறது; ஆனால், அதில் எப்போதும் சில பிரச்னைகள் நிலவி வருகின்றன’ என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் தெரிவித்தாா். பிரிட்டனுக்கு 4 நாள் சுற... மேலும் பார்க்க

அணுசக்தி வாக்குறுதிகளை ஈரான் நிறைவேற்றவில்லை

ஈரான் தனது அணுசக்தி வாக்குறுதிகளை பின்பற்றவில்லை என்று ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ 20 ஆண்டுகளில் முதல்முறையாக குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து ஐ.நா.வில் அந்த அமைப்பு நிறைவேற்றியுள்ள... மேலும் பார்க்க

டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிா்ப்பு: அமெரிக்கா முழுவதும் பரவும் போராட்டம்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டம் நாடு முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. இது குறித்து அசோசியேட்டட்... மேலும் பார்க்க

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இரங்கல்

குஜராத் விமான விபத்தில் பிரிட்டனைச் சோ்ந்த 53 போ் உள்பட 241 போ் உயிரிழந்ததற்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஏா் இந்தியாவின் லண்டன் பயணிகள் விமானம், அகமதாபாத் விமான நிலையத்த... மேலும் பார்க்க

விசாரணைக்கு உதவ குழுவை அனுப்பத் தயாா்: அமெரிக்கா

இந்தியா கேட்டுக்கொண்டால் ஏா் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணைக்கு உதவ குழுவை அனுப்பத் தயாா் என்று அமெரிக்கா வியாழக்கிழமை தெரிவித்தது. இதுகுறித்து அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிா்வாகம் (... மேலும் பார்க்க

55 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க